Filed under: Abu Adhil
அன்பிற்கினிய இஸ்லாமிய சகோதர சகோதரிகளே " அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்".
தங்களை இந்த மின்னஞ்சல் பூரண உடல் நலத்துடனும், உள்ளத்தில் ஈமானிய நிறைவுடனும் சந்திக்கும் என உறுதியாக நம்புகிறேன்.
மீண்டும் ஒரு புனித ரமலானை சந்திக்கும் நம் அனைவருக்கும் வல்ல இறைவன் தனது அருள் வளத்தையும், மன்னிப்பையும் நல்கிடுவானாக.
இப்புனிதமிகு மாதத்தில் வேகமாக வீசக்கூடிய காற்றைவிட வாரி வழங்கும் நல்லதொரு வழிக்காட்டுதலை விட்டுசென்ற வள்ளல் நபியின் வழிமுறையை பின்பற்றிடும் புண்ணியவான்களே! உங்களின் மேலான கவனத்திற்கு சில செய்திகளை முன்வைக்கின்றோம்.
தமிழக சிறைகளில் தற்போது 49 முஸ்லிம் சிறைவாசிகள் கடந்த 14 ஆண்டுகளாக தொடர் சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர். இவர்களில் 37 பேர் கோவையை சேர்ந்தவர்கள். கடந்த ரமளானில் நம் தமிழ் மண்ணின் இஸ்லாமிய சொந்தங்களும், சவுதி வாழ் இஸ்லாமிய சொந்தங்களும் மற்றும் வளைகுடா வாழ் சகோதரர்கள் அளித்திட்ட உதவியின் காரணமாக, மிகுந்த சிக்கலான வழக்குகளிருந்து 13 , 14 , 15 , ஆண்டுகளுக்கும் மேலாக சிறைப்பட்டிருந்த 6 சகோதரர்களை உச்சநீதிமன்றத்தின் வாயிலாக, இந்த சிறைவாழ் மக்களுக்காக அரும்பாடுபடும் சிறுபான்மை உதவி அறக்கட்டளை சகோதரர்கள் மீட்டெடுத்தார்கள் (அல்ஹம்துலில்லாஹ்). தொடர்ந்து மீதமுள்ள சகோதரர்களையும் மீட்டெடுக்க பெரும் அளவிலான பொருளாதார தேவை இருக்கின்றது. அதற்கு தாங்கள் அனைவரும் உங்களுடைய ஜகாத்தயோ அல்லது சதக்காவையோ வாரி வழங்கிட வேண்டுமென்று சிறைவாசிகள் பணிவன்புடன் கேட்டு கொள்கிறார்கள்.
நம்முடைய சிறு தொகையும் அவர்களின் சுதந்திர காற்றை சுவாசிக்க உதவிடுமானால் அவர்களும் குடும்பங்கள் செய்யும் துஆக்கள் நமக்கு நன்மையை பெற்று தரும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.
அன்பிற்கினிய சகோதரர்களே,
முதலில் இந்த சிறைவாழ் சொந்தங்களை மீட்டெடுக்க தமிழகத்தின் தெருக்களில் உங்களை நாடிவரும் சகோதரர்கள் வேறு யாரும் அல்ல. சிறைவாசம் அனுபவித்து கொடிருக்கும் நம் சகோதரர்களின் ரத்த சொந்தங்கள்தான். நம்மை அணுகியிருக்கும் இந்த சகோதரர்கள் பெரும் உறுப்பினர்களை கொண்ட பேரியக்கம் அல்ல, சமுதாய மக்களை இரவு, பகல் என உடனுக்குடன் தொடர்புகொள்ளும் ஆற்றல் கொண்ட மீடியாக்களில் வலம் வருபவர்களும் அல்ல. மாறாக இவர்கள் விரல் விட்டு எண்ணக்கூடிய ஒருசிலரை மட்டும் கொண்டு இயங்கிக்கொண்டிருக்கிறார்கள். அனால் இந்த சிறைவாசிகளை மீட்டெடுக்கும் பணிக்கான பொருளாதார தேவைகளோ இவர்களை வழி தெரியாமல் விழி பிதுங்கச்செய்தபோதும், கடந்த ரமளானில் நம் சொந்தங்கள் அளித்த பேருதவியால், மாஷா அல்லாஹ், கடந்த 13 , 14 , 15 ஆண்டுகளாய் சிறைப்பட்டிருந்த சிறைச்சகோதரர்களை அவர்களின் சிக்கலான ( RSS அலுவலகம், ஸ்ரீதர் வழக்கு, நாகூர் ஆலிம் ஜார்ஜ் வழக்கு ) போன்ற வழக்குகளை உச்சநீதிமன்றம்வரை சென்று நல்ல சில வழக்கரிங்கர்களை வைத்து வாதாடி விடுதலை பெற்றிட முடிந்தது. இன்னும் இவர்களைப்போல் சிறையில் தங்கள் காலங்களை கழித்து கொண்டிருக்கும் நம் சிறை சகோதரர்களை மீட்பதற்காக இந்த ரமளானிலும் நம்மை நாடி நிற்கிறார்கள்.
இந்த மின்னஞ்சல் மூலம் எல்லா சிறைச்சகோதரர்களின் நிலைமையை எடுத்து கூற முடியாவிட்டாலும் ஒரே ஒரு சகோதரனின் நிலையை எடுத்து முன்வைப்பது இந்த மின்னஞ்சலுக்கு வலுவூட்டுதளாக இருக்கும் என உறுதியாக நம்புகிறேன்.
இணைக்கப்பட்டிருக்கும் மீதமுள்ள சிறைவாசிகளின் பட்டியலில், ஆறாவதாய் இடம்பற்றிருக்கும் சகோதரரின் பெயர் சகோ. அபுதாகிர். இவர் கிட்னி நோயாலும், இதய நோயாலும் பாதிக்கப்பட்டு இருக்கிறார். இவர் நோயும் முதிர்ச்சியின் காரணமாக வாரம் இருமுறை இவருக்கு dialysis என்னும் ரத்த மாற்றம் செய்யப்பட வேண்டும். மருத்துவர்களின் அறிக்கையின்படி இவருடைய உயிருக்கு மருத்துவ உத்திரவாதமின்மையால் எந்நேரமும் இறக்கலாம் என்று சான்றிதழ் வழங்கப்பட்டது. இருப்பினும் அதை ஏற்றுகொள்ள மறுத்த நீதிபதி 13 ஆண்டுகள் ஆகியும் இவர்களை பிணையில் விட மறுக்கிறார்கள். என்ன ஒரு பாரபட்சம்? ஐந்து ஆண்டுகள் ஆனாலே எவ்வளவு பெரிய குற்றத்தை செய்த விசாரணை கைதியாக இருந்தாலும் பிணை வழங்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறுகிறது ஆனால் நம் சகோதரன் 13 ஆண்டாகியும் பிணை மறுக்கப்படுகிறதே இதை நாம் எங்கு சென்று முறையிடுவது.
என் சகோதரன் அபுதாகிர் மட்டும் இப்படி வாடவில்லை, சிறையில் உள்ள ஏனைய சகோதரர்களின் நிலையும் இப்படிதான் உள்ளது. தீரா நோய் பிடித்தவர்களாக, தாயையும் தந்தையையும் இழந்தவர்களாக, திருமணம் முடுத்து சில நாட்களிலேயே சிறைப்பட்டவர்கள், பெற்ற பிள்ளையை தூக்கி கூட கொஞ்ச முடியாத துர்பக்கியசாலிகளாக, மனநலம் பாதிக்கப்பட்டவர்களாக, தங்களுடைய இளமை காலங்களையெல்லாம் இழந்து நம்மை நாடி நிற்கிறார்கள்.
இவர்கள் துயர் துடைத்திட வாருங்கள் கை கோர்ப்போம்.
இணைப்பு:
1 . சிறைவாசிகளுக்காக உதவிடுவீர் (நோட்டிஸ்)
2 . சிருபான்மாயில் உதவி அறக்கட்டளையின் செயலாளர் சகோ. சம்சுதீன் (கோவை வழக்கில் 13 ஆண்டுகள் சிறையில் இருந்து இப்போது பிணையில் வந்து மீதமுள்ள மக்களை மீட்டெடுக்க பாடுபடுகிறார்) அவர்களின் கடிதம்.
3 . சவுதியில் சிறைவாசிகளுக்காக வழக்கு நிதி வசூல் செய்ய சகோ. தமிமுல் அன்சாரி அவர்களின் பெயரில் அனுமதி கடிதம்.
4 .இரண்டு கிட்னியும் பாதிக்கப்பட்ட சகோ. அபுத்தாஹிரின் சகோதர சகோதரியின் கடிதம், மருத்துவ சான்றிதழ் என அனைத்தும் இணைக்கப்பட்டுள்ளது.
வல்ல ரஹ்மான் தனது திருமறையிலே கூறுகிறான்;
وَيُطْعِمُونَ الطَّعَامَ عَلَىٰ حُبِّهِ مِسْكِينًا وَيَتِيمًا وَأَسِيرًا
மேலும், அ(வ்விறை)வன் மீதுள்ள பிரியத்தினால் ஏழைகளுக்கும், அநாதைகளுக்கும், சிறைப்பட்டோருக்கும் உணவளிப்பார்கள்.(76 : 8 )
ஓர் இறைவனையும், அவனது நபியையும் நம்பி பின்பற்றும் நாம் அனைவரும் சகோதரர்கள். சுதந்திரக்காற்றை சுவாசிக்க துடிக்கும் நம் சகோதரனை மீட்டெடுக்க போராடுவோம், பாடுபடுவோம், உதவிடுவோம்.
உங்களுடைய உதவிகளை வழங்கிட உடனே தொடர்பு கொள்ளுங்கள்.
சகோ. அன்சாரி (அல் – கோபர், சவுதி ) - 0555 090 269
சகோ. தவ்பிக் (துபாய் ) – 0559494653
கீழ் காணும் link ஐ அழுத்தவும்.
http://tamilmuslimtube.magnify.net/video/29512997299230212965299530072
Kovai Siraivaasigal Notice0001.pdf
Kovai Siraivaasigal Letter 10001.pdf
Abuthahir Report0001.pdf
