மண்ணடி காகா


தோப்புத்துறை : கோடைகால பயிற்சி நிறைவு நிகழ்ச்சி



இலங்கைக்கு எதிரான தீர்மானம் வெற்றி பெற்றது. – அதிரை ஏ.எம்.பாரூக்
மார்ச்24, 2012, 3:30 பிற்பகல்
Filed under: Abu Adhil | குறிச்சொற்கள்: , , , ,

இலங்கைக்கு எதிரான தீர்மானம் வெற்றி பெற்றது - அதிரை ஏ.எம்.பாரூக்

UNO.jpg

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…

ஒரு வழியாக ஐ.நா மனித உரிமை கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை இந்தியா ஆதரித்து ஓட்டளித்த செய்தி அறிந்து மகிழ்ச்சி அடைகிறோம்.

தமிழ்நாட்டு ஊடகங்களைத் தவிற வடநாட்டு ஊடகங்கள் அனைத்தும் இதற்காக மத்திய அரசை கடுமையாக சாடி எழுதி இருந்தன. கலைஞர் கருனாநிதி அவர்கள் மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுத்து சாதித்து விட்டதாகவும் சாடி இருந்தன.

இனிவரும் காலங்களிலாவது ராணுவம் அப்பாவி மக்கள் மீது இது போன்று வரம்பு மீறுவது ஓரளவு குறைவதற்கு இது ஒரு வாய்ப்பாக அமையலாம் ஆனால் அமெரிக்காவுக்கு மட்டும் அமையாது ஐ.நா.வில் இயற்றப்படும் மனித உரிமை சம்மந்தமான சட்டங்கள் நெறிமுறைகள் அனைத்தும் பிற நாட்டவர்களுக்கு மட்டும் தான் அமெரிக்காவுக்கு மட்டும் கிடையாது இல்லை என்றால் இலங்கையை விடாது விரட்டிய அமெரிக்கா தனது ராணுவம் ஈராக்கின் அப்பாவி மக்கள் மீது வரம்பு மீறி அட்டூழியம் புரிந்ததற்காக கடும் நடிவடிக்கையை மேற்கொண்டிருக்கும் அல்லது ஐ.நா.வின் மனித உரிமை கவுன்சிலாவது அமெரிக்காவை குற்றவாளிக் கூண்டில் நிருத்தி நடவடிக்கை எடுக்க வைத்திருக்கும் அதற்கு அபுகிரைப் சிறைச்சாலை சித்ரவதை ஒன்றுப்போதுமானதாகும் மீதமுள்ளவைகள் இந்த கட்டுரையில் பட்டியல் இட முடியாத அளவு நீளமானதாகும்)

கண்களை கசியச் செய்யும் நிகழ்வுகள்.
இலங்கையின் அப்பாவி மக்கள் (நிராயுதபாணிகள்) மீது இலங்கை ராணுவம் இறுதிகட்டப் போரில் நடத்திய அட்டூழியங்கள் காண சகிக்காதது.

அப்பாவி தமிழர்களின் மீதான இலங்கை ராணுவத்தின் அட்டூழியத்தைப் பார்த்த யாருடைய கண்களும் கசியாமல் இருக்காது அதனால் தான் அதைப்பார்க்க சகிக்காமல் கலைஞர் அவர்கள் வீட்டை விட்டு வெளியேறி 27-4-2009 அன்று கடற்கரையில் அண்ணா சமாதி அருகில் இரண்டு கூலர்களை வைத்துக்கொண்டு கண்ணை மூடி நிம்மதியாகத் தூங்கி விட்டார்.

இன்று கலைஞர் அவர்கள் இலங்கை தமிழருக்கு மறுவாழ்வு கிடைக்கும் வரை தொடர்ந்து போராடுவோம் என்றும் அறிவித்துள்ளார் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பே மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்தோம் ஆனால் அவர்கள் கண்டு கொள்ள வில்லை என்றும் கூறுகிறார் (அரசியல் கூத்து).

மீண்டும் புலிகள் வரள மாட்டார்களா ?
இலங்கைக்கு எதிராக வாக்களித்த நாடுகளை நோக்கி இந்த ஆதரவு தீர்மானத்தால் மீண்டும் புலிகள் வளர மாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதத்தை அளிக்கிறீர்கள் என்று இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டதும் இலங்கைக்கான ஐ.நா உறுப்பினர் ஐ.நா.சபையில் எழுப்பியக் கேள்வி ஓட்டளித்த நாடுகளை சிந்திக்கத் தூண்டும் வகையில் அமைந்துள்ளது.

காரணம் போருக்கு முன்னும் பின்னும் புலிகளில் ஏராளமானோர் வெளிநாடுகளுக்கு அகதிகள் போல் தப்பிச் சென்று விட்டனர் இவ்வாறு சென்றவர்கள் இலங்கையில் மீண்டும் ஒருப் போரை வக்கிரமாக நடத்துவதற்கு தீவிர முயற்சியில் ஈடுப்பட்டு வருவதாக ஃப்ரான்ஸில் இயங்கும் பிரபல asies பத்திரிகை கடந்த வருடம் தகவல் வெளியிட்டிருந்தது.

கடந்த வருடம் புலிகளில் முக்கியமானோர் 500 பேர் அகதிகள் போல் கனடாவுக்குள் நுழைய முயன்றவர்களை கனடா அரசு கைது செய்து இலங்கைக்கு திருப்பி அனுப்பியதும் நினைவிருக்கலாம்.

இவர்கள் கனடாவில் வாழும் தமிழீழப் பிரிவினைவாதிகளுடன் இணைந்து இயக்கத்தை வலுப்படுத்தும் நோக்கில் புறப்படுவதாக தகவல் அறிந்தே கனடா அரசு இவர்களை கைது செய்து திருப்பி அனுப்பியதாகக் காரணம் கூறியது.

இது ஒரு புறம் தீவிரமாக நடந்து கொண்டிருக்கும் வேலையில் பழம் நழுவி பாலில் விழுந்ததைப் போல் இறுதிக்கட்ட யுத்தத்தில் இலங்கை ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டப் புலிகள் சிறிது சிறிதாக விடுதலையாகி இறுதியாக 2011 அக்டோபர் 1 ம் தேதி 1800 புலிகளை விடுவித்து அவர்களின் வேலையை சுலபமாக்கி விட்டது இலங்கை அரசு.

அதனால் இலங்கைக்கான ஐ.நா தூதரின் கேள்வி சிந்திக்கக் கூடியது. இலங்கைக்கு எதிராக வாக்களித்த நாடுகள் இது விஷயமாக சிந்தித்து இலங்கை அரசுக்கு உதவ முன் வர வேண்டும்.

தமிழ்நாட்டில் செல்லாக் காசான புலிகள்
தமிழ்நாட்டில் விடுதலை புலிகள் நடத்திய கோரத் தாண்டவத்தால் தமிழ்நாட்டு மக்கள் அப்பொழுதே அவர்களை வெறுத்து விட்டனர் (ஜெயலலிதா,சோ உட்பட).

தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் இலங்கை தமிழர்களும் கூட புலிகளின் கொடூர குணத்தை அறிந்து அவர்களை விட்டு விலகியே இருந்தனர் ஆனாலும் இலங்கை ராணுவத்தின் நெருக்குதலை அறிந்த புலிகள் இந்த தடவை ராணுவம் நம்மை சும்மா விடாது என்பதை அறிந்து பல பகுதிகளிலிருந்தும் மக்களை துப்பாக்கி முனையில் அழைத்துச் சென்று தங்களுக்கு கேடயமாக்கினர். அப்பாவி தமிழர்கள் அதிகமாக கொல்லப்பட்டதற்கு இதுவும் ஒரு காரணம்.

புலிகள் போரில் ஒடுக்கப்படுவதற்கு முன்னரே உலகம் முழுவதும் புலிகளுக்கான ஆதரவு குரல் ஒய்ந்து விட்டது இந்தியாவில் மட்டும் பிரபாகரனை இரகசியமாகச் சென்று சந்தித்து வந்த வை.கோ போன்றவர்களினால் அவ்வப்பொழுது ஒலித்துக் கொண்டிருந்தது இதில் புதிதாக சீமான் இணைக்கப்பட்டார்.

இதற்கெல்லாம் வெளிநாட்டில் வாழக்கூடிய புலிகள் ஆதரவு அமைப்பினர் பொருளாதார ரீதியில் உதவி வருகின்றனர் என்பதற்கு சான்றாக சமீபத்தில் கனடாவில் உள்ள கர்நாடக தமிழர் பேரவை அமைப்பினர் இந்தியா ஓட்டளித்து விட்டது என்று ஒதுங்கி விடாமல் இலங்கை மக்களுக்கான மறுவாழ்வு கிடைக்கும் வரை இந்தியாவில் போராட்டத்தை கடந்த காலத்தைப் போலவே வீரியப்டுத்துங்கள் என்று அறிவித்து உள்ளது.

இலங்கைக்கு எதிராக வாக்களித்த நாடுகளை நோக்கி மீண்டும் புலிகள் வளர மாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதத்தை அளிக்கிறீர்கள் என்று இலங்கைக்கான ஐ.நா உறுப்பினர் ஐ.நா.வில் கேள்வி எழுப்பியது ஆழ்ந்து கவனிக்கத் தக்கது.

கொலைவெறியும், இரத்த தாகமும்.

புலிகள் கொலைவெறியும், இரத்த தாகமும் பிடித்தவர்கள் இலங்கையின் பல பிரதமர்களை முக்கிய அதிகாரிகளை கொன்றுள்ளனர் இலங்கையில் அப்பாவி புத்த மக்கள் வாழும் பலப் பகுதிகளில் குண்டுகளை வீசி கொன்றவர்கள், இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியை கொன்றவர்கள்,

1990 ஆகஸ்டு 1ம் தேதி அக்கரைப் பற்று கிராமத்தில் 40 முஸ்லீம்கள் கைகள் பிணைத்து கட்டப்பட்டு தலையில் சுட்டு வீழ்த்தியவர்கள்.

அதே ஆகஸ்டு 2ம் தேதி அதே பாணியில் மஜீத் புரத்தில் 15 முஸ்லீம்களை சுட்டு வீழ்த்தியவர்கள்.

அதே ஆகஸ்டு 3ம் தேதி காத்தான்குடி மீரா ஜூம்ஆ பள்ளியில் இஷாத் தொழுகையில் ஈடுபட்ட 103 முஸ்லீம்களை குருவிகளை சுடுவதுபோல் சுட்டு வீழத்தியவர்கள்.

தொடர்நது இடைவிடாமல் மூன்று நாட்கள் கொலைவெறி புலிகளால் நடத்தப்பட்ட அப்பாவி முஸ்லீம்கள் மீதான வெறியாட்டததை மட்டும் இங்கே குறிப்பிட்டுள்ளோம்.

1985ல் தொடங்கி இலங்கை ராணுவத்தினரின் கிடிக்கிப் படிக்குள் புலிகள் சிக்கும் வரை அவர்களால் படுகொலை செய்யப்பட்ட முஸ்லீம்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்லும்.
ltte-kattankudi-muslim-mosque-massare-122.jpg

1987ம் ஆண்டு ஜூன் 2ம் தேதி யாழ்பானத்திற்குள் நுழைந்து முஸ்லீம்களுக்கு 2 மணிநேரம் மட்டும் கால அவகாசம் கொடுத்து உடுத்திய ஒருத் துணியுடன் கையில் ஐம்பது ரூபாய் மட்டும் எடுத்துக்கொண்டு வெளியேற்றியவர்கள். 1990ல் மன்னார் முஸ்லீம்களை இதே பாணியில் வெளியேற்றியவர்கள்.

Presentation1.jpg

இதெல்லாம் அமெரிக்காவுக்கு தெரியாமலில்லை, இலங்கைக்கு எதிராக ஓட்டளித்த நாட்டவருக்கும் தெரியாமலில்லை, தமிழ்நாட்டு வை.கோ.வுக்கும் தெரியாமலில்லை, சீமானுக்கும் தெரியாமலில்லை. கலைஞருக்கும் தெரியாமலில்லை, ஆனாலும் இனம் இனத்துடன் இணைந்தது.

இவர்களுக்கு உள்ள இன உணர்வும் கூட புலிகளுக்குக் கிடையாது அவர்களிடத்தில் ஊட்டப்பட்டது எல்லாம் கொலைவெறியும், இரத்த தாகமும் தான் அவர்களை எதிர்த்தால் யாராக இருந்தாலும் வேட்டையாடி விடுவார்கள் கோடிக் கணக்கில் பணம் கொடுத்து புலிகள் அமைப்பை நிறுவிய எம்.ஜி.ஆர் எதிர்த்திருந்தாலும் கூட சுட்டுத் தள்ள முயற்சி எடுத்திருந்திருப்பார்கள் இவர்களின் குணத்தை அறிந்து பணம் போனாலும் பரவா இல்லை தலை தப்பினால் போதும் என்று எம்.ஜி.ஆர் சும்மா இருந்து விட்டார்.

தமிழீழ விடுதலை எனும் ஒரே சிந்தனையில் செயல்பட்ட மாத்தையா, சபாரத்தினம், பத்மநாபா, அமிர்தலிங்கம், யோகேஸ்வரன் என்று இந்த காட்டுமிராண்டிகளால் படுகொலை செய்யப்பட்டோர் பட்டியல் நீண்டு கொண்டே செல்லும்.

அதனால் இந்த ஆதரவு தீர்மானத்தால் கொலைவெறிப் பிடித்த இந்த காட்டுமிராண்டிகள் மீண்டும் வளர மட்டார்கள் என்பதற்கு உலக நாடுகளின் ஆதரவை இலங்கைக்கு எதிராக திரட்டிய அமெரிக்கா உத்தரவாதத்தை அளிக்க வேண்டும்.

இது தான் அப்பாவி தமிழர்கள் இலங்கையில் மீண்டும் நிம்மதியாக வாழ வழி வகுக்கும்.

புலிகள் மீண்டும் வளர விடாமல் தடுப்பதற்கான திட்டத்தை வகுத்து இலங்கை அரசிடம் ஐ.நா. கொடுக்க வில்லை என்றால் மீண்டும் இலங்கை இரத்த பூமியாவதை எத்தனை நூரு அமெரிக்கா தலையிட்டாலும் தடுக்க முடியாது.

4:168,169. (தன்னை) மறுத்து அநீதி இழைத்தோரை அல்லாஹ் மன்னிப்பவனாக இல்லை. நரகத்தின் பாதைக்கே தவிர (வேறு) வழி காட்டுபவனாகவும் இல்லை. அதில் அவர்கள் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார்கள். இது அல்லாஹ்வுக்கு எளிதானது.

- அதிரை ஏ.எம்.பாரூக்



இனிய “ஈதுல் அல்ஹா” எனும் “ஹஜ் பெருநாள் நல்வாழ்த்துக்கள்”.
நவம்பர்5, 2011, 11:03 பிற்பகல்
Filed under: Abu Adhil | குறிச்சொற்கள்:

அஸ்ஸலாமு அலைக்கும்…… 

அனைவருக்கும் என் இனிய “ஈதுல் அல்ஹா” எனும்

“ஹஜ்  பெருநாள் நல்வாழ்த்துக்கள்”.

இந்த தியாக திருநாளில்

அல்லாஹ்வின் அருள்  நம்
அனைவர் மீதும் உண்டாகட்டுமாக,

இந்த தியாகத் திருநாளில் அனைத்து
மக்களுக்கும் பரக்கத்தையும், சந்தோஷத்தையும், நோயில்லாத வாழ்க்கையும்
அளவின்றி அல்லாஹ் ஏற்படுத்தி தருவானாக..

ஆமீன் !… ஆமீன் !!… யாரப்பல் ஆலமீன்….!!

சகோதரவத்துடன்…

ஆதம்.ஆரிபின் (மண்ணடிகாகா.காம்)

அனைவருக்கும் தியாகத் திருநாள் நல் வாழ்த்துக்கள்.



ராஸ் அல் கைமா : “ஏகத்துவ எழுச்சி மாநாடு”
ஆகஸ்ட்3, 2011, 1:15 மு.பகல்
Filed under: Abu Adhil | குறிச்சொற்கள்: , ,
அல்லாஹ்வின் அழகிய திருப் பெயரால்…
ராஸ் அல் கைமா மண்டல த.மு.மு.க மற்றும் 
தவ்ஹீத் பிரச்சாரப் பேரவை இணைந்து நடத்தும் 
“ஏகத்துவ எழுச்சி மாநாடு”
இடம் : கிராண்ட் ரெஸ்டாரண்ட் – அல் நக்கில், ராஸ் அல் கைமா
நாள் : ஆகஸ்டு – 19, வெள்ளிக்கிழமை, மாலை 4.30 அளவில் 
..: இஃப்தார் உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது :..

சிறப்பு பேச்சாளர்கள் :

 
மவ்லவி எஸ்.பி.யூஸுஃப் அவர்கள்

மவ்லவி இலங்கை முஹம்மத் நாஸர் அவர்கள்
( இஸ்லாமிய அழைப்பாளர்)
கோவை ஜெய்னுலாபிதீன் அவர்கள்
 

—————————————————————————
அல்லாஹ்வின் மார்க்கத்தை அதன் தூய வடிவில்
அறிந்துக் கொள்ள அழைக்கிறது… 

தவ்ஹீத் பிரச்சாரப் பேரவை – ராஸ் அல் கைமா மற்றும்
த.மு.மு.க – ராஸ் அல் கைமா மண்டலம் 
——————————————————————————————
மேலதிக விபரங்களுக்கு :

055 1398 200 – 050 6903 993

055 9494 653 – 055 7550 256



நாகை மாவட்டம் – கோடியக்கரை : ஷிர்க் திருவிழா
ஜூலை22, 2011, 11:04 பிற்பகல்
Filed under: Abu Adhil

நாகை மாவட்டம், கோடியக்கரை’யில் நடந்த இஸ்லாத்திற்கு எதிரான ஷிர்க் திருவிழா

Photos by : Murshid – Kodiyakarai

This slideshow requires JavaScript.



மரணத்திடம் தோற்ற அவதாரம்!
ஜூலை11, 2011, 10:11 பிற்பகல்
Filed under: Abu Adhil | குறிச்சொற்கள்:

மரணத்திடம் தோற்ற அவதாரம்!!

saibaba

‘உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் உள்ளது’, ‘சீரான உடல்நிலையில் உள்ளார்’ என்று சில நாட்கள் கூறப்பட்டு வந்த சாய்பாபா ஏப்ரல் 24 அன்று காலையில் மரணமடைந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மறுதினமே, அதாவது மார்ச் 28 அன்றே அவர் மரணமடைந்ததாகவும் ஆனால் நல்ல நாளில் அவரின் மரணத்தை அறிவிக்க வேண்டும் என்பதற்காக அவரின் குடும்பத்தினர் இதனை பிற்படுத்தியதாகவும் சிலர் கூறுகின்றனர்.

நாள்தோறும் நடைபெறும் ஆயிரக்கணக்கான மரணங்களில் குறிப்பிட்டு சொல்லவதற்கு இவர் ஒன்றும் அரசியல்வாதியோ நாட்டின் தலைவரோ அல்ல. ஆனால் அவர்களுக்கு ஈடான ஒரு மதிப்பை இவர் பெற்றார், ஆன்மீகத்தின் காரணமாக. கடவுள்களுக்கு குறைவில்லாத இந்த தேசத்தில் கடவுளின் அவதாரங்களுக்கும் குறைவில்லை. மக்களின் அறியாமையை பயன்படுத்தி அவர்களின் பணம், மானம், உயிர் என எதையும் சூறையாடுவதற்கு இந்த அவதாரங்களும் சாமியார்களும் தவறவில்லை. பிரேமானந்தா முதல் நித்தியானந்தா வரை பல ஆனந்தாக்கள் வந்தாலும் மக்கள் திருந்தியபாடில்லை.

சாய்பாபாவிடமும் சர்ச்சைகளுக்கு குறைவில்லை. பதினான்காவது வயதில் ஷீரடி சாய்பாபாவின் அவதாரமாக தன்னை தானே முடிசூட்டிக்கொண்டார். விபூதி முதற்கொண்டு கைக்கடிகாரம் வரை மந்திர சக்தி மூலமாக வரவழைத்த இவரின் தந்திரத்தை பலரும் போட்டுடைத்தனர்.

1993ஆம் ஆண்டு இவரது ஆசிரமத்தில் காவல்துறையினரால் இவரின் நெருங்கிய வட்டத்தை சார்ந்த நான்கு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். எதற்காக கொல்லப்பட்டனர்? மர்மம் இன்னும் நீடிக்கிறது. பாலியல் குற்றச்சாட்டுகளும் இவர் மீதுண்டு. இருந்தபோதும் இவரின் புகழுக்கும் பக்தர்களுக்கும் எவ்வித குறையுமில்லை. சாமான்ய மக்கள் முதற்கொண்டு நாட்டின் பிரதமர்கள், ஜனாதிபதிகள் என அனைவரும் இவரின் பக்தர்கள். பெரியாரின் பகுத்தறிவு பாசறையிலும் அண்ணாவின் வழிகாட்டுதலிலும் வந்ததாக கூறிக்கொள்ளும் கலைஞர் இவருக்கு ஒரு பாராட்டு விழாவையும் எடுத்தார். இவரின் குடும்பத்தினர் பாபாவின் பக்தர்கள்.

இவை ஒரு புறம் என்றால்,போலி ஆன்மீகத்தை மக்கள் இனியாவது உணர்வார்களா என்ற கேள்வி மீண்டும் ஒருமுறை எழுந்துள்ளது. தான் 94 வயது வரை உயிர் வாழ்வேன் என்றும் அதற்கு முன் அடுத்த சாய்பாபாவை அறிவிப்பதாகவும் சாய்பாபா தெரிவித்திருந்தார். கடவுளின் அவதாரம் என்று கூறியவருக்கு தான் இந்த உலகை விட்டு பிரியப்பபோகும் நாளை.. இல்லை.. வருடத்தை கூட அறியும் சக்தி இல்லை என்பதை தற்போது அனைவரும் அறிந்துள்ளனர்.

மரணத்தை வென்றவர் எவரும் இல்லை. மரணம் தங்களை அழைத்து செல்லும் நேரத்தையும் எவரும் அறிவதில்லை. 125 ஆண்டுகள் வரை வாழ்வேன் என்று உறுதியுடன் கூறிய காந்தியடிகளையும் ‘எனக்கு மரணமே கிடையாது’ என்று கூறிய யாகவா முனிவரையும் இதே பூமியில் தான் நாம் கண்டோம். இறுதியில் வென்றவர் யார் என்பதையும் நாமறிவோம். நிச்சயம் சம்பவிக்க கூடிய மரணத்தை மனித மனம் ஏனோ ஏற்க தயங்குகின்றது.

நித்திய வாழ்வும் நீடித்த ஆயுளும் வேண்டும் என்பது அனைவரும் விரும்பும் ஒன்று. இது மனித இயல்பு. மனிதனை படைத்த இறைவனை இந்த நித்திய வாழ்வை வைத்தே உள்ளான். மரணத்திற்கு பின் ஒரு வாழ்க்கை இருக்கிறது என்பதை பெரும்பான்மையான மதங்கள் கூறுகின்றன.

இஸ்லாம் இதனை தெளிவாக கூறுகின்றது. இந்த உலக வாழ்க்கை பயிர் செய்யும் ஒரு பூமியே. இதற்கான அறுவடையை மனிதன் மரணத்திற்கு பின் வரும் மறுமை என்ற வாழ்க்கையில்தான் மேற்கொள்ள முடியும். இவ்வுலகில் மனிதன் நல்லறங்களை செய்தால் சுவனத்தை அடைவான், தீயறங்கள் புரிந்தால் நரகத்தில் புகுவான். சுவனமோ, நரகமோ இரண்டுமே நிலையான வாழ்க்கைதான். ஆக தன்னை படைத்த இறைவனை ஏற்றுக்கொண்டு, நல்லறங்கள் புரிந்து வாழ்ந்தால் மனிதன் நிச்சயம் சுவனத்தில், ஒரு நிலையான வாழ்க்கைக்காக பிரவேசிப்பான். இந்த நிலையான வாழ்க்கையை அடைய அவன் நிச்சயம் மரணிக்க வேண்டும். ஆனால், மரணம் முற்றுப்புள்ளி அல்ல…

சிந்தனைக்கு
-ஏர்வை ரியாஸ்



இன்ஷா அல்லாஹ் வெற்றிப்பெறுவோம் -தமீமுன் அன்சாரி
மார்ச்14, 2011, 9:05 மு.பகல்
Filed under: Abu Adhil | குறிச்சொற்கள்: , , , , , , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்…

மமக போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் இன்ஷா அல்லாஹ் வெற்றிப்பெறுவோம்

-தமீமுன் அன்சாரி

 


பரபரப்பான அரசியல் சூழ்நிலையில்,  இன்று தமிழக அரசியல் அரங்கில் குறிப்பிட்டு  பேசப்படும் முஸ்லீம் அரசியல் கட்சிகளில் ஒன்றான  மற்றும் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகத்தின் அரசியல் கட்சியான மனிதநேய மக்கள் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் சகோதரர் தமீமுல் அன்சாரி அவர்கள் 11-மார்ச்-2011 வெள்ளிக்கிழமை காலை நம் அதிரைநிருபருக்காக அளித்த பிரத்தியோக நேர்கானல்.

அதிரைநிருபர்: அவசர அவசரமாக அ.தி.மு.க.வுடன் அடைக்கலம் பெற்றுள்ளதாக பரவலாக பேசப்படுகிறதே இதனைப் பற்றி தங்களின் கருத்து என்ன ?
தமீமுல் அன்சாரி: அவசர அவசரமாக என்ற அந்தக் கேள்வியே தவறானது தேர்தல் தேதி அறிவித்த அந்த நேரத்தில் ஏதாவது ஒரு கூட்டனில் அடைக்கலமாவது என்பது அவசர அவரமாக எடுத்த முடிவாக இருக்கும், ஆனால் மனிதநேய மக்கள் கட்சி ஏழுமாதங்களுக்கு முன்பாகவே அனைத்திந்திய அண்ணா திரவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் செல்வி. ஜெயலலிதாவின் அழைப்பின் பேரிலேயே அதனை ஏற்று முறையான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டதனால், நிதானமாக கூட்டனியிலே நாங்கள் இணைந்தோம். எனவே அவசர அவசரமான கூட்டனி என்பது தவறானது, இன்றைய சூழலில் அனைந்திந்த அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமையிலான எங்களது அணி இருந்து கொண்டிருக்கிறது. அந்த அணிதான் 200 மேற்பட்ட தொகுதிகளில் இன்ஷா அல்லாஹ் வெற்றியை பெறும்.
அதிரைநிருபர்: எவ்வகையான நிபந்தனைகளை வைத்து மூன்று தொகுதிகளைப் பெற்றீர்கள் ?
தமீமுல் அன்சாரி: அனைந்திந்திய அண்ணாதிராவிட முன்னேற்ற கழகத்தில் மனிதநேய மக்கள் கட்சி ஒரு நியாயமான தொகுதிகளைப் பெறுவதிலே பல்வேறு கட்ட முயற்சிகளை எடுத்தோம். ஆனால் இன்றைய அரசியல் சூழலில் ஒரு மெகாக் கூட்டனியை உருவாக்கக் கூடிய சூழல் தமிழகத்திலே ஏற்பட்டு இருக்கிறது. உதாரணத்திற்கு தமிழகத்தின் “ஹோஸ்னி முபாரக்”காக இருக்கக் கூடிய கலைஞர் கருணாநிதியும், மன்னராட்சிபோல தமிழகத்தில் சுரண்டிக் கொண்டிருக்கும் அவரது குடும்பத்தினரையும் அகற்றுவதுதான் எங்களுடைய முதல் செயல் திட்டமாக இருக்கிறது. அந்த அடிப்படையில பல்வேறு பெரிய கட்சிகளெல்லாம் எங்களது கூட்டனியில் வருகை தந்து கொண்டிருந்த காரணத்தினால், நாங்கள் ஒருசில தொகுதிகளை குறைக்க வேண்டிய ஒரு சூழல் உருவானது.
குறைந்தது 15 தொகுதிகளின் பெயர்கள் பட்டியலை செல்வி ஜெயலலிதா அவர்களிடம் கொடுத்து அதிலிருந்து 12 தொகுதிகளை நேரடியாக எங்களுக்கு வேண்டுமென்று கோறிக்கை வைத்தோம். அவர்கள் பேச்சு வார்த்தை குழுவினருடன் தொடர்ந்து பேசுங்கள் அவர்கள் இறுதி செய்வார்கள் என்றும் சொன்னார்கள். அதன் பிறகு ஐந்து சுற்று பேச்சு வார்த்தைகள் அனைந்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தினருடைய குழுவுக்கும் மனிதநேய மக்கள் கட்சியின் குழுவுக்கும் நடைபெற்றது. அதன் அடிப்படையிலே கடைசியாக விட்டுக் கொடுங்கள் என்று சொல்லும்போது, ஏழு தொகுதிகள் என்று இறங்கி வந்தோம். பிறகு சூழ்நிலைகள் மிகவும் நெருக்கடியாக இருக்கிறது பல்வேறு அமைப்புகளுக்கு கொடுப்பதாக வாக்குறுதி அளித்திருக்கிறோம் என்று வழியுறுத்திச் சொன்னார்கள். கடைசியாக தமிழகத்திலே மூன்று தொகுதிகளும் புதுச்சேரியிலே ஒரு தொகுதியும் தருவதாக அவர்கள் சொன்னார்கள் இதனை ஏற்பதா வேண்டாமா என்ற பல்வேறு சிந்தனை பொறுப்பு எங்கள் மத்தியிலே ஏற்பட்டது. அந்த நேரத்திலே மீண்டும் தனித்து போட்டியிடலாமா அல்லது மூன்றாவது அணி அமைக்கலாமா எனது போன்ற பல்வேறு கருத்துகளை பல சகோதரர்களால் முன் வைக்கப்பட்டது. ஆனால் சமுதாயத்தில் பெரும்பாலான சகோதர்கள், சமுதாய ஆர்வளர்கள், அரசியல் விரும்பிகள், ஜமாத்தார்கள் வந்து கலந்து கொண்டு நீங்கள் எதிர்பார்த்த ஆறு அல்லது ஏழு எண்ணிக்கை கிடைக்காத நிலையில், இந்த மூன்றும் மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதியையும் ஏற்றுக் கொள்வதில் தவறில்லை காரணம் மீண்டும் தனித்து நிற்பது ஆபத்தானது. விஜயகாந்த் போன்ற பெரிய கட்சிகளலே தனித்து நிற்கக் கூடிய நிலையில் இல்லை. எனவே அரசியல் விழிப்புணர்வு இல்லாத இச்சமூகத்தில் இதுபோன்ற முடிவுகளை நாம் எடுப்பது தற்போது நல்லதல்ல, முதலில் நல்ல தொடக்கமாக வைத்துக் கொண்டு அதிமுகவுடன் இணைய வேண்டுமென்றும் வேண்டுகோள்களையும், நிர்பந்தங்களையும் அறிவுத்தல்களையும் சொன்னார்கள்.
பலநேரம் நாம் கட்சி அமைப்பை நடத்தினாலும் எந்த சமூகத்தை முன்வைத்து நாம் சமுகப் பணி செய்கிறோமோ அந்தச் சமூகத்தின் பெரும்பான்மையோரின் கருத்தை ஏற்றுக் கொள்ள வேண்டிய ஒரு சூழ்நிலை இருக்கிறது அந்த அடிப்படியிலே இந்த மூன்று மற்றும் ஒன்று மொத்தம் நான்கு தொகுதிகளை நாங்கள் ஏற்றுக் கொண்டோம். அதே நேரம் இந்த நான்குத் தொகுதிகளை நீங்கள் குறைவானது என்று நினைத்து விடக் கூடாது 1991க்கு பிறகு ஒரு முஸ்லீக் கட்சிக்கு தனி சின்னத்தில் நான்கு தொகுதிகள் கிடைத்திருப்பது இதுதான் முதல்முறை. இங்கே காணாமல் போன முஸ்லீம்களுடைய அரசியல் கண்ணியத்தை முதன்முறையாக் மீட்டிருக்கின்றோம். இதில் முழு திருப்தி இல்லாவிட்டாலும் ஒரு நல்ல தொடக்கமாக கருதுகிறோம், எதிர்காலத்திலே கூடுதல் தொகுதி என்ற  இலட்சியத்தை அடைவோம்.
அதே நேரத்தில் இன்னொன்றை நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும் மனிதநேய மக்கள் கட்சிகளை விட புகழ் பெற்ற பல்வேறு கட்சிகளின் இன்றைய நிலை என்னவென்று பார்த்தோமென்று சொன்னால் பிரபல நடிகர் சரத்குமாருடைய கட்சி தமிழகத்தில் பத்து மாவட்டங்களிலே முழுமையான ஒருங்கினைப்பாக வைச்சிருக்காங்கன்னு சொல்லலாம் அவர்களுக்கே இரண்டு தொகுதிகள்தான் கிடைத்திருக்கிறது. அதேமாதிரி பத்து பதினைந்து மாவட்டங்களில் இருக்கும் டாக்டர் கிருஷ்னசாமி பிரபலமான தலைவர் பல்வேறு தேர்தல்களை  சந்தித்தவர் அவருக்கே இரண்டு தொகுதிகள்தான் கிடைத்திருக்கிறது. இப்படிப்பட்ட நிலைகளை பார்க்கும்போது மனிதநேய மக்கள் கட்சி நான்கு தொகுதிகளை சொந்த சின்னத்தில் பெற்றிருப்பதும் மிகப் பெரிய ஒரு தொடக்கம் என்பதை இந்த முஸ்லீம் சமுதாயம் பாராட்டுகிறது.
இது மட்டுமல்லாமல் இந்தச் சமுதாயத்தினுடைய பல்வேறு கோரிக்கைகளை செல்வி ஜெயலலிதாவிடம் வைத்திருக்கிறோம். உதாரணத்திற்கு 3.5 சதவிகித இட ஒதுக்க்கீட்டை எதிர்காலத்தில் கூடுதலாக்குவதற்கான சட்ட முன்நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்திருக்கின்றோம். உருது பேசக் கூடிய முஸ்லீம்கள் தமிழகத்திலே ஆறு ஏழு மாவட்டங்களிலே பரந்து இருக்கின்றார்கள் அந்த மக்களுக்கு சமச்சீர் கல்வியில் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது அதை நிவர்த்தி செய்வதற்கான முன் முயற்சிகளைச் செய்ய வேண்டும். அடுத்ததாக திருமணப் பதிவுச் சட்டத்தில் முஸ்லீம்களின் தனிப்பட்ட உரிமைகளில் சங்கடங்களும் பாதிப்புகளும் ஏற்படுத்தும் விதத்தில் தலைவர் கருனாநிதியின் அரசால் ஏற்பாடு செய்ய்ப்பட்டுள்ள காரணத்தினாலே அவைகளையும் எதிர்காலத்திலே அதிமுக கழக ஆட்சி அமைந்த பிறகு சரி செய்ய வேண்டும் என்பது போன்ற பெரிய கோரிக்கைகளையும் ஏராளமான துணைக் கோரிக்கைகளையும் நாங்கள் வைத்திருக்கிறோம். அவைகளையெல்லாம் ஆட்சிக்கு வந்ததும் நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்திருக்கிறார்கள்.
அதிரைநிருபர்: தேர்தல் செலவுகளுக்கு கூட்டனிக் கட்சியிலிருந்து பணம் கிடைக்கிறதா? தேர்தல் ஆனையம் பல கட்டுப் பாடுகளை விதித்துள்ளபோதும் வேறு எந்த வழிகளில் தேர்தல் செலவுகளுக்கு பணம் திரட்டுகிறீர்கள்?
தமீமுல் அன்சாரி: நாங்கள் இரட்டை இலையில் போட்டியிடுவதாக இருந்தால் அனைந்திந்திய அண்ணா திரவிட முன்னேற்ற கழகம் தமிழகத்தில் ஒன்பது தொகுதியும் பாண்டிச்சேரியில் ஒரு தொகுதியும் மொத்தம் பத்து தொகுதிகளைக் கூட கொடுத்திருப்பார்கள். தேர்தல் செலவுகளையும் அவர்களே ஏற்றிருப்பார்கள் ஆனால் சுயமாகவும் சுதந்திரமாகவும் செயல்படமுடியாது என்ற காரணத்தினால், எம்.எல்.ஏ.க்களாக பத்து பேரும் ஆகக் கூடிய வாய்ப்பு இருந்தும் கூட சமுதாயத்தின் தன்மானம் மீண்டெடுக்கப் படவேண்டும் என்ற சொந்தச் சின்னம், குறைவான தொகுதிகள் கிடைத்தாலும் பரவாயில்லை, தேர்தல் நிதி அவர்கள் தராவிட்டாலும் பரவாயில்லை என்ற நிலையைத்தான் எடுத்திருகின்றோம். எனவே எங்கள் கூட்டனியிரிடம் பத்து பைசாவைக் கூட பெறவில்லை என்பதை ஊரரிந்த உண்மையரிந்த அரசியல் அறிவரிந்த அனைவருக்கும் தெரியும்.
இரண்டாவது, இந்த தேர்தல் செலவுகளை எப்படி செய்யப் போகிறீர்கள் என்று கேட்டீர்கள், எங்களுடைய தாய் கழகமான த.மு.மு.க. பதினாறு ஆண்டுகளை கடந்து பதினேழாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது. எங்களுக்கு அம்பானிகளோ, டாட்டாக்களோ, வளைகுடாவில் இருக்கும் பெரும் முதலாளிகளோ உதவி செய்யவில்லை, சாதாரன கூலித் தொழிலாளிகள் நடுத்தர மக்கள் சிறு வணிகர்கள் சிறு முதலாளிகள் என்று சமுகத்தின் சாமானிய மக்கள் அளிக்கும் நிதியை வைத்துதான் எங்களது தாய் கழகமான த.மு.மு.க.வை நடத்தி வருகிறோம் அந்த மக்களின் நிதியைக் கொண்டுதான் இன்ஷா அல்லாஹ் தேர்தலையும் சந்திப்போம்.
அதிரைநிருபர்: போட்டியிடும் தொகுதிகள் மற்றும் போட்டியிடும் வேட்பாளர்கள் பற்றிய தகவல் உள்ளதா?
தமீமுல் அன்சாரி: நாங்கள் தனிநபர் சார்ந்த அமைப்பல்ல தனிநபர் துதிபாடுவதையும் தரை மட்டமாக்க வேண்டும் என்று சொல்லக் கூடிய ஒரு பேரமைப்பிலிருந்து வெளியே வந்த ஒரு அரசியல் கட்சியைச் சார்ந்தவர்கள் எங்களுடைய எந்த முடிவாக இருந்தாலும் மாநில செயற்குழுவிலே ஆலோசனை செய்து அதன் பின்னால் மனிதநேய மக்கள் கட்சியின் உயர்நிலைக் குழுவால் முடிவு அதை நாங்கள் அறிவிப்போம் 15ம் தேதி எங்களுடைய மாநில செயற்குழு கூடி ஆலோசிக்கிறது 16ம் தேதி எங்களுடைய உயர்நிலைக் குழு கூடி அநேகமாக 17ம் தேதி வேட்பாளர் பட்டியலை இன்ஷா அல்லாஹ் அறிவிப்போம்.
அதிரைநிருபர்: இறையச்சமுள்ள முஸ்லீம் ஒருவர் உங்களின் கூட்டணிக்கு எதிரணியில் போட்டியிடுகிறார் அவரை ஒரு முஃமீன் என்று ஏன் ஆதரிக்கக்கூடாது? இங்கு உங்கள் அரசியல் கொள்கை  முக்கியமா அல்லது இஸ்லாமிய கோட்பாடு முக்கியமா?
தமீமுல் அன்சாரி: இது ஒரு சமூகப் பொறுப்புள்ள கேள்வி என்பதை நான் மறுக்கவில்லை, கடந்த காலங்களில் நாங்கள் எப்படியெல்லாம் செயல்பட்டொம் என்பதை புரிஞ்சுகிட்டீங்கன்னு சொன்னா இந்தக் கேள்விக்கான விடைகளை சொல்வேன். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் வேலூர் தொகுதியில் திராவிட முன்னேறக் கழகம் சார்பாக சகோதரர் அதுர்ரஹ்மான் அவர்கள் போட்டியிட்டார்கள் அங்கேயே அப்துர்ரஹ்மானுக்கு எதிராக வேட்பாளர்களை நிற்கவைக்கும் வாய்ப்புகள் இருந்து நாங்கள் அதனைச் செய்யாமல் அவர்களுக்கு ஆதரவைத் தெரிவித்தோம். அதேபோல் தேனி பாராளுமன்றத் தொகுதியிலே சகோதரர் ஹாருன் அவர்கள் காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிட்டார்கள் அவருக்கு எதிராகவும் வேட்பாளர்களை நிறுத்த வேண்டாம் அவர்களையே ஆதரியுங்கள் என்றும் சொன்னோம். கடந்த காலங்களிலே ஒரு நல்ல அனுகுமுறையை நாங்கள் பின்பற்றி இருக்கிறோம் ஆனால், வெற்றி பெற்ற பிறகு அந்தக் கட்சியைச் சார்ந்தவர்களே என்று கூட அல்லாமல் சமுதாய உணர்வுடன் நன்றி சொல்ல வேண்டும். மாறாக வெற்றி பெற்ற பிறகு எங்களுக்கு எதிரான வேலைகளையும் எல்லா செயல் திட்டங்களையும் அறிவித்தார்கள், செயல்படுத்தினார்கள் பல இடங்களிலே. சகோதரர் ஹாரூன் அவர்கள் சென்னையிலே நமது தொண்டர்கள் மீது வன்முறை ஏவும் நிலையெல்லாம் ஏற்பட்டது, இதையெல்லாம் பார்கின்றபோது நமக்காக ஒருகாலாத்தில் களத்தில் நின்று எதிர்பாராமல் வாக்களித்தார்களே ஆதரவளித்தார்களே அவர்களுக்கு எதிராக நாம இப்படி செய்து கொண்டிருக்கிறோமே என்ற குற்ற உணர்ச்சியும் அவர்களிடமில்லை. எனவே இப்படிப்பட்டவர் ஒரு இருக்கும்போது நாங்கள் ஏன் அவர்களை ஆதரிக்க வேண்டும் என்ற கேள்வி எங்களுடைய ஆதரவு தரப்பிலிருந்து எழுகிறது.
இப்போ நாங்கள் அரசியல் கட்சியை உருவாக்கியிருக்கின்றோம் இப்படி நாங்கள் ஒரு முடிவை எடுத்தால் எங்கள் கட்சியில் இருக்கக் கூடிய கூட்டனிக் கட்சியைச் சேர்ந்தவர்கள் கூட்டனிக் கட்சியில் இருக்கக் கூடிய பல்வேறு சமூக அமைப்பினரும் என்ன செய்வார்கள் நாம் போட்டியிடும் தொகுதியில் அவர்களின் சாதியைச் சார்ந்தவர்கள் வேட்பாளராக போட்டியிட்டால் அவர்கள் அதேபோல் ஒரு முடிவை எடுத்தால் என்னவாகும் எனவே ஒரு முஸ்லீம் ஒப்பந்தத்தை காப்பாற்ற வேண்டும். அந்த அடிப்படையில் கூட்டனியில் ஒரு ஒப்பந்தம் போட்டிருக்கின்றோம் யார் எப்படியிருந்தாலும் நம்முடைய கூட்டனியில் இருக்கும் வேட்பாளரை ஆதரவு அளிப்பது என்று வாக்குறுதி அளித்திருக்கின்றோம், ஒரு முஸ்லீம் வாக்குறுதியை காப்பாற்றக் கூடியவனாக இருக்க வேண்டும் அந்த அடிப்படையிலே எங்களது கூட்டனியில் யாரெல்லாம் போட்டியிடுகிறார்களோ அவர்களுக்கெல்லாம் வாக்களிப்போம் வாக்கும் சேகரிப்போம், இதில் இரட்டை வேடங்களுக்கு இடமில்லை.
அதிரைநிருபர்: ம.ம.க.போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்று (இன்ஷா அல்லாஹ்).. எதிரனியினருக்கு அதாவது தி.மு.க கூட்டனிக்கு பெரும்பான்மை பெற தேவையிருக்கும் பட்சத்தில் உங்களது ஆதரவை கோறினால் உங்களது நிலைபாடு என்ன ?
தமீமுல் அன்சாரி: இன்ஷா அல்லாஹ் எழுதி வைத்துக் கொள்ளுங்கள் எங்களுடைய அனைந்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகக் கூட்டனிதான் ஆட்சி அமைக்கப் போகிறது… தி.மு.க. ஆட்சி அமைக்கும் என்பதை நம்புவதே ஒரு பகல் கனவு, கானல் நீர், அத்தைக்கு மீசை முளைத்திருப்பதுபோல்.
அதிரைநிருபர்: ஒற்றுமை ஒற்றுமை என்று வாய்கிழியப் பேசும் இயக்கங்களும் சமுதாய அமைப்புகளும் எதைச் சாதித்தன? த.மு.மு.க. மற்றும் ம.ம.க.வையும் சேர்த்தான் கேட்கிறோம் ?
தமீமுல் அன்சாரி: சமுதாய ஒற்றுமை அவசியம், சமுதாய ஒற்றுமை தேவை என்ற கருத்து நமது சமூகத்திலே அரிதுபெரும்பான்மையாக இருக்கிறது என்பதை ஏற்றுக் கொள்கிறோம். அந்தக் கருத்திலே நூறு சதவிகிதம் உடன்பாடுண்டு. ஆனால் நடைமுறையில் இந்த உலகம் இந்த ஊர் எப்படி இருக்கிறது இங்கு கூற வேண்டும் ஒரு பதினைந்து நபர்கள் கொண்ட கூட்டுக் குடும்பத்தை ஒற்றுமையாக வழிநடத்த முடியாத நிலைதான் இன்றைய சூழல் இருக்கிறது.
ஒரு பத்தாயிரம் இருபாதிரம் மக்களைக் கொண்ட அதிராம்பட்டினத்தில் கூட ஒரு ஐக்கிய ஜமாத்தை நிறுவி நடத்த  முடியவில்லை. அப்படியிருக்கும்போது தமிழகத்தில் ஐம்பது இலட்சத்திற்கும் அதிகமாக முஸ்லீம்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள், ஒரு ஊரிலே ஐக்கிய ஜமாத்தை நிறுவுவதற்கு ஒரு போராட்டத்தை நடத்தும்போது ஐம்பது இலட்சத்திற்கும் மேல் பரந்து விரிந்த தலைமையின் கீழ் வாழ்ந்து கொண்டிருக்கக்கூடிய முஸ்லீம் சமுதாயத்தினர் மத்தியில் ஒரு ஒற்றுமை ஏற்படுத்துவது என்பது ஒரு எளிதான காரியம் அல்ல. ஆனாலும் எப்படியாவது அதனை நெருங்கி விடவேண்டும் என்று பாடுபடுகிறோம், அவர்களுடைய கருத்தினை ஏற்றுக் கொள்கிறோம், அதற்காக பல்வேறு முயற்சிகளும் எடுத்துக் கொண்டிருக்கிறோம். அதான் நான் சொல்வது 2001லே  குஜாரத்திலே கலவரம் ஏற்பட்டபோது தமிழகத்திலே எல்லா முஸ்லீம் அமைப்புகளோடு இணைந்து ஒரே மேடையிலே கலந்து கொண்டு எங்களது கண்டனங்களை வலியுறுத்தியிருக்கிறோம், அதே போன்று திருமண பதிவுச் சட்டத்தை கலைஞர் கருனாநிதி அவர்களின் அரசாங்கம் கொண்டு வந்து முஸ்லீம்களுடைய தனியுரிமைகளுக்கு எதிராக செயல்பட்டபோது அனைத்து முஸ்லீம் அமைப்புகளோடு கலந்து இது குறித்து அமைச்சர் துரைமுருகன் அவர்களை பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் தலைமையிலான அனைத்து முஸ்லீம் அமைப்புகள் அடங்கிய குழு சென்று அவர்களை சந்தித்து அதில் திருத்தம் செய்வதற்கான முழு முயற்சியும் செய்தது. அதுவும் அடுத்து திருவிடைச்சேரி எனும் ஊரிலே ஒரு படுகொலைச் சம்பவம் நடைபெற்றபோது அது ஒட்டுமொத்த முஸ்லீம் சமுதாயத்தின் கண்ணியத்தை பாதிக்கக் கூடிய செயலாக இருக்கிற காரணத்தினாலே 19 முஸ்லீம் அமைப்புகள் இணைந்து இது குறித்து பல்வேறு ஆக்கபூர்வமான ஆலோசனைகளிலும் நாங்கள் ஈடுபட்டோம்.
இப்போதும்கூட நாங்கள் தொகுதிகளைப் பெற்ற பிறகு சகோதர அமைப்புக்களை நாங்கள் சென்று சந்தித்து வருகிறோம். நாகர்கோவிலுக்குச் சென்று ஜாக் அமைப்பின் தலைவர் கமாலுதீன் மதனி அவர்களை பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் அவர்கள் சந்தித்து பேசினார்கள். அடுத்து பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா தலைமையகத்திற்கு சென்று அதன் தலைவர்களை பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் சந்தித்து பேசினார்கள். தொடர்ந்து பாக்கர் அவர்களுடைய இந்திய தவ்ஹீத் ஜமாத் என்ற அமைப்பிடமும் பேசியிருக்கிறோம், ஜமாத்துல் உலமா அமைப்புடனும் பேசியிருக்கிறோம், இஸ்லாமிய விழிப்புணர்வு கழகம் சந்தித்து பேசியிருக்கிறோம் இதேபோன்று ஜமாத்தே இஸ்லாமி, ஜமியத்துல் அஹ்லே ஹதீஸ் போன்ற சகோதர அமைப்புகளோடு சந்தித்து பேசி அரசியலிலே ஒரு ஒருமித்த கருத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சியை எடுத்து வருகிறோம். இவைகளெல்லாம் ஒற்றுமைக்கான முயற்சியின் அடித்தளங்கள் என்று நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். தேர்தலுக்குப் பிறகு இதனை மேலும் வலுவூட்டுவதற்கு மனிதநேய மக்கள் கட்சியும் எனது பெருமைமிகு தாய் கழகமான தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகமும் தொடர்ந்து முயற்சிகள் எடுக்கும் இன்ஷா அல்லாஹ்.
அதிரைநிருபர்: நேற்றைய தினம் பேட்டி அளித்த முஸ்லீம் லீக் மகளிர் அமைப்பு சகோதரி ஃபாத்திமா முசாஃபர் அவர்கள் முஸ்லீம்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது என்று தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார் இச்சந்தர்பத்தை பயன்படுத்தி அவரை உங்கள் அணிக்கு சேர்த்துக் கொள்ள முயற்சிப்பீர்களா?
தமீமுல் அன்சாரி: முஸ்லீம் இயக்கங்கள் எந்தக் காலத்திலும் பிளவுபடுவதை நாங்கள் விரும்பவில்லை பல்வேறு அமைப்புகள் செயல்படலாம் அவர்கள் மத்தியிலே மாற்றுக் கருத்துகள் இருக்கலாம் தவறு கிடையாது. ஆனாலும் முஸ்லீம் லீக் காயிதே மில்லத் இஸ்மாயில் சாஹிப் அவர்களால் உருவாக்கப்பட்ட நீண்ட நெருங்கிய அரசியல் பாரம்பரியமிக்க ஒரு கட்சி அந்தக் கட்சிக்கு மூன்று தொகுதிகளை உதயசூரியன் சின்னத்தில் கொடுத்ததே ஒரு அவமானம் என்பது முஸ்லீம் சமுதாயத்தின் கருத்து. மூன்றைக் கொடுத்து அதில் ஒரு தொகுதியைப் பறித்த  கலைஞர் கருனாநிதியுடைய சர்வாதிகாரப் போக்கை முஸ்லீம் சமுதாயம் கடும் எதிர்ப்பை தெரிவித்துக்கிறது இந்த நிலையிலே கலைஞர் கருனாநிதி முஸ்லீம் சமுதாயத்தை எப்படியெல்லாம் கிள்ளிக் கீரையாக நினைக்கிறார் என்பதற்கு உதாரணம்.
அவரால் கொங்கு முன்னேற்றக் கழகத்திலிருந்து ஒரு தொகுதியை கூட பெற முடியவில்லை எல்லோரும் சொல்கிறார்கள். கொங்கு முன்னேற கழகத்தின் மதிப்பு என்பது ஐந்துதான் என்று, காங்கிரசை வெறுப்பேற்ற வேண்டும் என்பதற்காகத்தான் கொங்கு முன்னேற்ற கழகத்திற்கு கூடுதலாக இரண்டு தொகுதிகளை கொடுத்து ஏழு தொகுதிகளாக அதிகரிச்சு கொடுத்திருக்காங்க, அதிலிருந்து ஒரு தொகுதியை பறித்திருக்கலாம். அல்லது திருமாவளவன் என்பவருடைய சக்தி என்பது ஏழு அல்லது எட்டு தொகுதிகள்தான் என்பது எல்லோருக்கும் தெரியும் அவர்களிடமிருந்தாவது ஒன்றை கேட்டுப் பெற்றிருந்திருக்கலாம். டாக்டர் ராமதாஸுக்கு அதிகமான தொகுதிகளை கொடுத்தார் ஸ்டாலின் அவர்கள் லண்டன் செல்வதற்கு முன்பாக ப.ம.க.விற்கு மொத்தமே அதிகபட்சமாக இருப்பத்தி ஐந்து தொகுதிகள்தான் தரமுடியும் என்று சொல்லிவிட்டுச் சென்றார் அவர் லண்டனில் இருக்கும்போது கலைஞர் கருனாநிதி காங்கிரஸ் கட்சியை வெறுப்பேற்ற வேண்டும் என்பதற்காகவே முப்பத்தி ஓர்  தொகுதியை கொடுத்திருக்கிறார் அவர்களிடமிருந்தாவது அந்த மூன்றை எடுத்து பெற்று கொடுத்திருக்கலாம். ஆனால், மிக மிக குறைவாக முஸ்லீம் லீக்கிற்கு கொடுத்த மூன்றில் ஒன்றை பறித்துக் கொண்டது மிக மிக அநியாயம் சகோதரி ஃபாத்திமா முசாஃபர் அவர்களின் குரல் ஒட்டு மொத்த முஸ்லீம் லீக் தொண்டர்களின் குரலாகத்தான் இருக்கிறது. இது பற்றி முஸ்லீம் லீக் தலைமைதான் முடிவு செய்ய வேண்டும். முஸ்லீம் லீக்கிற்கு இந்நிலை ஏற்பட்டதைக் கண்டு நாங்கள் மகிழ்ச்சியடைந்திடவில்லை, வருத்ததில் இருக்கிறோம் என்பதுதான் உண்மை.
அதிரைநிருபர்: அனைத்து முஸ்லீம்களின் வாக்குகளை ஒன்றிணைக்க வழிகள் என்ன ? எப்போது முஸ்லீம்கள் தங்களது பலத்தைக் காட்ட வாய்ப்பு ஏற்படும் ? அதற்கு ம.ம.க.வின் செயல் திட்டங்கள் என்ன ?
தமீமுல் அன்சாரி: வருகின்ற சட்டமன்ற தேர்தலில் முஸ்லீம் முஹல்லாக்களில் முஸ்லீம் வாக்குகளின் நிலைமை பற்றி மனிதநேய மக்கள் கட்சியில் என்ன நினைக்கிறது என்பது பற்றி அவைகளையெல்லாம் வெளிப்படையாக இப்போது விவாதிக்க முடியாது களத்தில் மிகவும் நிதானமாக சமூக மக்களின் பேராதவோடு அதனை நாங்கள் செய்து காட்டுவோம் அந்த வாக்குகள் எங்களது அணிக்கு வருகின்ற காரனத்தினால்தான் திராவிட முன்னேற்ற கழக தலைமியிலான அணி 70க்கும் மேற்பட்ட தொகுதிகளில் தோற்கப்போகிறது என்பதை காலம் நிரூபிக்கும். இன்ஷா அல்லாஹ்.
அதிரைநிருபர்: பிரிந்த சகோதரர்களிடம் அதாவது த.த.ஜ. சகோதரர்களிடம் சமாதானம் பேசி சுமூகமான சூழல் உருவக்க ஏன் பகிரங்கமாக இதுவரை நீங்கள் முயற்சி செய்யவில்லை ? இதுவரை தாங்கள் சந்தித்த அமைப்புகள் பற்றி சொன்னீர்கள் அவர்களிடமும் சமுதாய நலன் கருதி ஒற்றுமைக் கரம் நீட்டலாமே ? கருத்து வேறுபாடுகளை தூக்கியெரிந்து, விட்டுக் கொடுத்துதான் போனால் என்ன ? இதனை ஏன் செய்ய மறுக்கிறீர்கள்?
தமீமுல் அன்சாரி: விட்டுக் கொடுப்போர் கெட்டுப் போவதில்லை என்பது ஒரு பழமொழி. அந்தப் பழமொழியை நாங்கள் உணர்ந்திருக்கிறோம், நாங்கள் வலைந்து போக தயராக இருக்கிறோம், அதற்காக முதுகை ஒடித்துக் கொள்ள முடியாது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். கடந்த காலங்களிலே தமிழ்நாடு தவ்ஹீத் ஜாமாத்துடம் ஆழமான கருத்து வேறுபாடுகள் இருந்தது என்பது உண்மை, மறுக்க முடியாது.
ஆனால் ஒவ்வொரு கட்டத்திலும் அதை சுமூகம் செய்வதற்கான சில முயற்சிகளை நாங்கள் செய்தும் வந்திருக்கிறோம். குறிப்பாக கடந்த மூன்று ஆண்டுகளில் அதாவது மனிதநேய மக்கள் கட்சி துவங்கப்பட்ட பிறகு எங்களது அதிகாரப்பூர்வமான பத்திரிக்கையான மக்கள் உரிமையிலே பார்த்தால் அவர்கள் மீது வைத்த விமர்சனங்கள் ஒன்று அல்லது இரண்டாகத்தான் அல்லது மூன்றாகத்தான் இருந்தது. ஆனால் அந்த அளவுக்கு அவர்கள் மீதான எந்த விமர்சனமும் செய்யாமல் நாங்கள் மவுனமாக இருந்து எங்களுடைய களத்திலே எங்களுடைய பணிகளை செய்து வந்தோம். ஆனால் நாடாளுமன்றத் தேர்தல் கடந்த 2009 தேர்தல் நடைபெறுவதற்கு முன்பாகவும் அதற்கு பின்னாலும் அவர்கள் எங்கள்மீது சுமத்திய அநியாமான குற்றச்சாட்டுகளும் எங்களுக்கு அவர்கள் அளித்த தொந்தரவுகளும் எங்களைப் பற்றி அவர்கள் எழுதிய கீழ்த்தரமான மூன்றாம் தர விமர்சனங்களும் கொஞ்ச நஞ்சமல்ல என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மைகள். அதையும் மீறி நாங்கள் மவுனம் சாதித்தோம், ஆனால் அந்த மவுனத்தை பலவீனமாவர்கள் என்று நினைத்துக் கொண்டு தொடர்ந்து இவர்கள் தாக்குதல் தொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். எதற்கும் ஓர் எல்லையுண்டு, அவர்கள் எல்லை மீறிப் போய்கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.
இன்னும் சொல்லப் போனால் அவர்களுடைய மாநாடு ஜூலை 4ம் தேதி ஒன்று சென்னையிலே நடைபெற்றது அந்த மாநாட்டிற்கு எதிராக எந்த வேலையும் நாங்கள் செய்யவில்லை இன்னும் சொல்லப் போனால் எங்களிடம் சிலர் கேட்டபோது கூட அவர்கள் நடத்தினால் நல்லவிதமாக நடத்தட்டும் என்றுதான் சொன்னோம். மறைமுகமாகக் கூட நாங்கள் தொந்தரவு செய்யவில்லை. சகோதரர் பி.ஜே. அவர்களே ஆன்லைன் பி.ஜே.யில் குறிப்பிட்டிருந்தார்கள் என்று உங்களுகே தெரியும் அந்த அளவுக்கு செயல்பாடுகளில் எங்களது கன்னியத்தை செயல்படுத்தினோம்.
இன்னும் சொல்லப் போனால் 2006ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் முடிந்த ஒரு பத்து நாட்களில் சகோதரர் பி.ஜே.அவர்களை கொலை செய்வதற்காக ஒரு செயல் திட்டம் ரகசியமாக முன்னிருத்தப்பட்டது அந்தச் செய்தி எங்களுக்குத் தெரிய வந்த பிறகு உடணடியாக பி.ஜே.அவர்களுக்கு தெரியப்படுத்தி உரிய பாதுகாப்புகளை செய்ய வேண்டும் என்று சொல்லி நானும் எனது தாய் கழகத்தின் பொதுச் செயலாளர் சகோதரர் ஹைதர் அலி அவர்களும் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் மற்றும் தலைமை நிர்வாக குழு அறிவுறுத்தலின் அடிப்படியில் அன்றே உளவுத்துறை ஐஜியாக இருந்த சகோதரர் ஈஸ்வர மூர்த்தியை நேரில் சந்தித்து பி.ஜே.அவர்களுக்கு பாதுகாப்பு கொடுங்கள் என்றும் சொன்னோம். காரணம் என்னவென்று கேட்கும்போது எங்களுக்கும் அவர்களுக்கும் இடையே பல கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் இதுபோன்ற வன்முறைகளை பயங்கரவாதங்களை ஒருபோதும் யாரும் யார்மீதும் ஏவிவிடக் கூடாது என்று உறுதியாக இருக்கிறோம். நீங்கள் அவருக்குரிய பாதுகாப்பை கொடுங்கள் என்றும் கேட்டுக் கொண்டோம். அந்த நேரத்திலே சகோதரர் பி.ஜே அவர்கள் பாக்கருடன் இருந்தார்கள் எங்களுடைய பொதுச் செயலாளர் ஹைதர் அலி அவர்கள், பாக்கர் அவர்களை தொடர்பு கொண்டு பி.ஜே.அவர்களுக்கு பாதுகாப்பை கொடுங்கள் அவர் வழக்கமாக இருக்குமிடத்தில் இருக்காமல் வேறு இடத்தில் இருக்க வையுங்கள் என்றும் அறிவுறுத்தினோம். அப்படியெல்லம் நாங்கள் எங்கள் நல்ல எண்ணத்திலே பல்வேறு கால கட்டங்களிலே நெருங்கியிருக்கிறோம்.
இன்னும் சொல்லப் போனால் 2004ம் வருடம் என்று நினைக்கிறேன் கும்பகோனத்தில் அவர் ஒரு மாநாடு நடத்தியபோது பத்திரிக்கையலே ஊடகத்துறையிலே அந்த அமைப்பைச் சேர்ந்த எ.எஸ்.அலாவுதீன், எம்.ஐ. சுலைமான் என்பவர்களின் பெயராலே வெடிகுண்டு கடிதங்கள் வந்தது. இதைப் பற்றி கூட எங்களது பத்திரிக்கையிலே அந்த அமைப்புக்கும் எங்களுக்கும் எத்தனை கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அந்த அமைப்பைச் சார்ந்தவர்கள் இத்தகைய பங்கரவாத வன்முறையெல்லாம் செய்ய மாட்டார்கள் என்று உறுதிபட எங்களது மக்கள் உரிமையிலே தெரிவித்தோம். இப்படியாக பல்வேறு காலகட்டங்கள் எங்களது நல்ல எண்ணங்களை அவர்களிடம் தெரிவித்து வந்திருக்கிறோம். ஆனால் அவர்கள் என்ன செய்தார்கள் என்றால் கடந்த ரமளானிலே ஆன்லைனில் இணையதளத்திலே சகோதரர் பி.ஜே.அவர்கள் அவருடைய உயிருக்கு ஆபத்து என்று கூறி அதற்கு த.மு.மு.க.வில் உள்ள்ச் பலரும் உடந்தை என்பது போல எழுதியது மிகப் பெரிய கோபத்தையும் பாதிப்பையும் ஏற்படுத்தியது. நாங்கள் எங்களது வேலையப் பார்த்துச் சென்று கொண்டிருந்த தருணங்களில் வீண் பழிகள் போட்டு கொந்தளிப்பான சூழலை உருவாக்க சகோதரர் பி.ஜே.செய்தார்கள்.
அடுத்து திருவிடச்சேரி சம்பவத்திலே அவர்கள் நடந்து விதமும் அதன் பின்னால் அளித்த தன்னிலை விளக்கவும் சமுதாய மக்களிடையே பெரிய கொந்தளிப்பைதான் ஏற்படுத்தியது. அன்றை நிலையில் எங்களது மாற்றுக் கருத்தையும் தெரிவித்தோம் அதைகூட அவர்கள் ஜனநாயகபூர்வமாக எடுத்துக் கொள்ளாமல் ஒரு மோசமான எதிர் எழுத்துத் தாக்குதலையும் செய்தார்கள்.
இப்போது கூட மனிதநேய மக்கள் கட்சி போட்டியிடும் மூன்று தொகுதிகளிலும் போர்க் கொடி தூக்க சபதம் செய்திருக்கிறார்கள் இத்தகைய நிலையில் அவர்களிடம் எப்படி நாங்கள் பேச்சு வார்த்தை நடத்த முடியும் ? நீங்கள் யோசித்துப் பார்க்க வேண்டும். கொஞ்ம் கூட நல்லெண்ணமில்லாமல், கொஞ்சம்கூட நாகரீகம் இல்லாமல், கொஞ்சம் கூட பண்பாடு இல்லாமல் பெருந்தன்மையில்லாமல் குர்ஆன் ஹதீஸ் பேசிக் கொண்டு இப்படிப் பட்ட சமுதயத்தை பிளவுபடுதும் வேலைகளை செய்பவர்களிடம் நாங்கள் பேச்சு வார்த்தை நடத்துவதில் நம்பிக்கையில்லை, அதனை நாங்கள் தொண்டர்கள் யாரும் எதிர்பார்க்கவில்லை சமுதாயமும் விரும்பவில்லை. சமுதாயத்திலுள்ள 99% மக்கள் நம்மோடு இருக்கிறார்கள், அவர்களுடைய ஆதவரவும் எல்லாவற்றிற்கும் மேலாக அந்த ஓரிறைவனின் கிருபையும் எங்களுக்கு இருப்பதாக நம்புகிறோம் அந்த நம்பிக்கையோடு வெற்றிவாகை சூடுவோம், இன்ஷா அல்லாஹ்..
அதிரைநிருபர்: கொள்கை வேறுபாடு உள்ள ஒரே காரணத்திற்காகத்தான் ம.ம.க.வை எதிர்க்கிறோம் என்று  த.த.ஜ.சகோதரர்கள் சொல்லி வருகிறார்கள், சரி அப்படி என்னதான் கொள்கை வேறுபாடுகள் உள்ளது த.மு.மு.க.வுக்கும் த.த.ஜ.வுக்கும் ?
தமீமுல் அன்சாரி: கொள்கை வேறுபாடு என்னவென்பதை அவர்கள்தான் விளக்க வேண்டும் அவர்களின் கொள்கை என்ன என்பதை அவர்கள் இதுவரை தெளிவாக வெளியிடவில்லை அபூஅப்துல்லாவோடு என்ன கொள்கை வேறுபாடு என்று அவர்கள் விளக்கவேண்டும், S. கமாலுதீன் மதனியோடு என்ன கொள்கை வேறுபாடு என்று விளக்க வேண்டும், இதுபோன்று பல்வேறு பாக்கர் அவர்களோடு என்ன கொள்கை வேறுபாடு என்று விளக்க வேண்டும், எல்லோரிடமும் கொள்கை வேறுபாடுதான் காரணமாக சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் அதைப் பற்றி ஆழமாக நான் ஆழமாக விமர்சிக்க விரும்பவில்லை, ஒன்றை மட்டும் கேட்டுக் கொள்கிறேன் மனசாட்சிக்குரிய தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தொண்டர்கள் கொஞ்சம் சிந்திக்க வேண்டும் தேர்தலிலே மனிதநேய மக்கள் கட்சியை தோற்கடிப்போம் என்று அவர்களுடைய தலைவர் சகோதரர் பி.ஜெயுனுலாபிதீன் அவர்கள் செய்திருக்கக் கூடிய இந்த சபதம் உண்மையிலேயே உங்களது மனசாட்சிக்கு உடண்பாடு உள்ளதா என்று கேள்வி கேட்டுக் கொள்ளுங்கள் அதாவது இணைவக்கக் கூடிய எத்தனையோ முஸ்லீம் வேட்பாளர்களை நாங்கள் ஆதரித்து வெற்றுபெற செய்வோம் என்று சொல்லுகிறார்கள். முழுக்க முழுக்க எந்த கொள்கையும் இல்லாத பல்வேறு சமூகங்களை சார்ந்த வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய தயாராக இருக்கிறார்கள். ஆனால் எல்லா மேடைகளிலும் இறைகொள்கை அடிப்படியிலும், தெளிவு அடிப்படையிலும், சமுதாய நலனின் அடிப்படையிலும் இணைந்து இருக்கக் கூடிய மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர்களை தோர்கடிப்போம் என்பது எந்த விதத்தில் நியாயம்? என்று கேள்வி எழுப்பி அவர்கள் (ததஜ சகோதரர்கள்) சரியான முடிவு எடுவில்லை என்று சொன்னால் நிச்சயமாக நாளை மறுமையிலே அல்லாஹ்வுக்கு பதில் சொல்ல கடமைப்பட்டிருக்கிறார்கள் என்பதை சுட்டிக் காட்டுகிறேன்.
அதிரைநிருபர்: நிறைவாக ஒரு கேள்வி, இதுவரை தமிழக இஸ்லாமிய கட்சிகளிடம் இல்லாத தெளிவும் ம.ம,க.விடம் அப்படி என்னதான் இருக்கிறது ?
தமீமுல் அன்சாரி: எங்களுடைய அரசியலே மாறுபட்டதாகத்தான் இருக்கும், உதாரணத்திற்கு தனிமனித துதிபாடலை முன் வைத்துதான் எல்லா அரசியல் கட்சிகள் செயல்படுது, ஆனால் நாங்கள் ஒரு கூட்டுத் தலைமையை முன்வைத்து செயல்படுகிறோம். தனிநபரின் ஆளுமைகள் வெளிப்படும் அவர்களின் திறன்கள் வெளிப்படும், ஆனால் தனிநபரின் முடிவிலே அல்லது சார்ந்தே எங்களது கட்சி செயல்படுவது இல்லை.
இரண்டாவதாக எங்களிடம் இந்த பணக்காரர்களிடம் மண்டியிடக் கூடிய அரசியலில் நாங்கள் ஒருபோதும் விரும்பவில்லை. இப்போதிருக்கும் முஸ்லீம் கட்சிகள் என்ன செய்கிறார்கள் என்றால், தங்களுக்கு சீட்டு கிடைத்த உடனே யாராவது கோடீஸ்வரங்க கிட்ட அல்லது கட்சிக்கு தொடர்பில்லாத உறுப்பினரல்லாத, கட்சித் தொடண்டர்களுக்கும் தொடர்பில்லாத ஒரு பெரிய பணக்காரரிடம் அந்த தொகுதிகளைக் கொடுத்து வெற்றி பெற்று வாருங்கள் என்று சொல்லக் கூடிய சூழலைதான் சமுதாயத்தில் இருக்கிறது.
ஆனால் எங்களுடைய கட்சியில அப்படியெல்லாம் இல்லை குறைந்தது மூன்றாண்டுகள் உறுப்பினராக இருக்க வேண்டும், அவரது உழைப்பை உதாரணத்திற்கு இடஒதுக்கீட்டு போராட்டத்தில் அவர் பங்கு பெற்றாரா, சிறைச் சாலைகளுக்குச் சென்றார்களா ? சமுதாய பிரச்சினைகளுக்கு எத்தகைய போராட்டங்களை நடத்தியிருக்கிறார் என்ற அளவுகோளின் அடிப்படையில்தான் எங்களது வேட்பாளர்களை முடிவு செய்கிறோம்.
மூன்றாவது விசயம் என்னவென்றால் எங்களுடைய கட்சியிலே வேட்பாளர்கள் செலவு செய்ய முடியாது உதாரணத்திற்கு தமிழ்நாட்டிலே மூன்றும் பாண்டிச்சேரியிலே ஒன்றும் நான்கு தொகுதிகளில் போட்டியிட வேண்டுமென்றால் போட்டியிடும் வேட்பாளர் ஒரு ருபாயைக் கூட அவரது சொந்தக் காசில் செலவிடக் கூடாது என்பதை எங்களது கட்சியின் கொள்கையாக வைத்திருக்கின்றோம். காரணம் சொந்த காசை செலவு செய்யும் போது அந்த வேட்பாளர் வெற்றி பெற்று வரும்போது தான் செலவு செய்த காசை எடுக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடும் வாய்ப்புகள் ஏற்படுகிறது. பல பேர் ஊழலை ஒழிப்போம் என்று சொல்வார்கள், ஆனால் ஊழலை ஒழிப்பதற்கான அடித்தளத்தையே நாங்கள் சரியாக செய்து திட்டமிட்டு வருகிறோம். அந்த அடிப்படையிலே கட்சி பொதுமக்களிடமிருந்து நிதி திரட்டி அந்த நிதியிலிருந்துதான் வேட்பாளர்களுக்கு தேர்தல் செலவுகள் செய்யப்படும்.
இவைகளெல்லாம் நம் முஸ்லீம் சமுதாயத்திலே ஒரு மாறுபட்ட நல்ல அரசியலாக கருதுகிறோம். அடுத்ததாக இன்றைக்கு பொதுவாகவே அரசியல் என்பது இந்தியாவிலே ஆயிரம் அல்லது ஆயிரத்துக்கு மேற்பட்ட குடும்ப வலையங்களுக்குள் சுற்றி வரக்கூடிய அரசியலாக சுற்றி வரக்கூடிய சூழலை பார்க்கிறோம். ஒன்று அவர்களிடம் பணம் இருக்க வேண்டும், அல்லது பழைய பாரம்பரியம் இருக்க வேண்டும், அல்லது அரசியலிலே அவர்களது முன்னோர்கள் யாராவது இருந்திருக்க வேண்டும். இப்படிப் பட்ட நிலையில் உள்ள குடும்பங்கள்தான் அரசியலிலே முதன்மைபடுத்தி முன்னிலைக்கு வரக்கூடிய நிலை எல்லா அரசியல் கட்சிகளிடமும் உண்டு அது முஸ்லீம் கட்சிகளிடமும் இருக்கிறது. மனிதநேய மக்கள் கட்சியில் மட்டும்தான் பொருளாதர பின்னனிக்கோ, பாரம்பரிய பின்னனிக்கோ, குடும்ப பின்னனிக்கோ, குடும்ப அரசியல் பின்னனிக்கோ இடமில்லாமல் யாரெல்லாம் சமுதாயத்திற்கா தியாகம் செய்தார்களோ, உழைத்தார்களோ ஆற்றல் இருக்கிறது அறிவு இருக்கிறதோ அவர்களுக்கெல்லாம் முன்னுரிமை என்ற அடிப்படையிலே வாய்ப்புகளையும் பொறுப்புகளையும் நாங்கள் வழங்கியிருக்கிறோம்.
இதை எல்லாம் ஒரு மாறுபட்ட நல்ல அரசியல் என்று நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் மிக முக்கியமாக இளைஞர்களுக்கும் மாணவர்களுக்கும் நிறைய வாய்ப்புகளைத் தருகிறோம் பெண்களுக்குரிய மரியாதையை கொடுக்கிறோம் ஒட்டுமொத்த முஸ்லீம் சமுதாயத்தின் உணர்வுகளை பிரதிபலிக்ககூடிய வேலையை செய்கிறோம் அதனுடைய ஒரு அம்சம் தான் தேர்தலிலே நாங்கள் தொகுதிகளைப் பெற்ற பிறகு சமுதாயத்தில் இருக்கக் கூடிய பல்வேறு அமைப்புகளோடு கலந்துரையாடி வருகிறோம் இத்தகைய முன் முயற்சிகளை கடந்த காலங்களில் வேறு எந்த முஸ்லீம் அமைப்புகள் யாரும் செய்யவில்லை என்பதை இந்த நேரத்திலே நினைவூட்ட கடமைபட்டிருக்கிறேன்.
எனவே ஒரு மாறுபட்ட அரசியலை, நல்ல அரசியலை, மனிதநேய அரசியலை முன்னிருத்தி, முஸ்லீம் சமுதாயத்தின் எல்லா சகோதரர்களும் அமைப்புகளும் கருத்து வேறுபாடுகளை மறந்து, கட்சி வேறுபாடுகளை மறந்து நான்கு தொகுதிகளிலும் (3+1) நாங்கள் வெற்றி பெறுவதற்கு இந்த சமுதாயத்தின் பேராதரவை நாங்கள் கேட்கிறோம். குறிப்பாக அதிராம்பட்டினம் என்பது தமிழகத்திலே இருக்கக் கூடிய முஸ்லீம் ஊர்களிலே முதல் ஐந்தில் பிரதானமாக இருக்கக் கூடிய ஊர் மறுப்பதற்கில்லை அதிராம்பட்டினத்து சகோதரர்களை இந்த இணைய தளத்தின் வாயிலாக சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறோம். அதிராம்பட்டினம் சகோதர்கள் உலகமுழுவதும் பரந்து விரிந்து வாழ்ந்து வருகிறார்கள் தங்களுடைய அந்த வாய்ப்பினை பயன்படுத்தி எங்களுக்கான ஆதரவை தளத்தை அதிகமாக முன்னிருந்த வேண்டும் என்று இந்த அதிரைநிருபர் வலைத்தளத்தின் வாயிலாக நான் தலைமையின் சார்பாக உங்களை கேட்டுக் கொள்கிறேன். அஸ்ஸலாமு அலைக்கும்.
—–
இது நம் அதிரைநிருபர் வலைத்தளத்தின் முதல் அதிகாரப்பூர்வமான அரசியல் நேர்கானல் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். இது முழுக்க முழுக்க அரசியல் உண்மை செய்திகளை அறிந்துக்கொள்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட நேர்கானல். இந்த நேர்கானல் பற்றி உங்கள் அனைவரின் கருத்துக்களை அறிய விரும்புகிறோம்.
இன்ஷா அல்லாஹ் மீண்டும் ஒரு நேர்கானலில் சந்திக்கிறோம்.
- அதிரைநிருபர் குழு.

நன்றி : அதிரை நிருபர்.காம்

 



சுனில் ஜோஷி கொலை: பெண் ஹிந்துத்துவ தீவிரவாதி பிரக்​யாசிங் தாக்கூர் கைது

சுனில் ஜோஷி கொலை: பெண் ஹிந்துத்துவ தீவிரவாதி பிரக்​யாசிங் தாக்கூர் கைது

மும்பை,பிப்.27:ஸம்ஜோதா எக்ஸ்பிரஸ் உள்பட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடந்த குண்டுவெடிப்புகள் மற்றும் நாசவேலைகளில் ஈடுபட்ட ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதி சுனில் ஜோஷி கொலைத் தொடர்பான வழக்கில் ஹிந்துத்துவா பெண் தீவிரவாதியான சன்னியாசினி பிரக்யாசிங் தாக்கூர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் ஏற்கனவே மலேகான்-2008 குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிகிட்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மலேகான் வழக்கை விசாரித்துவரும் Maharashtra Control of Organised Crime Act (MCOCA) நீதிமன்றத்தின் அனுமதியுடன் மத்தியபிரதேச போலீஸார் பிரக்யா சிங்கை கைது செய்தனர். இதனை சிறப்பு அரசு தரப்பு வழக்கறிஞர் ரோஹினி சலியன் தெரிவித்தார்.

இந்தியாவில் நடந்த பல்வேறு குண்டுவெடிப்புகளில் முக்கிய பங்காற்றிய ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதி சுனில் ஜோஷி கடந்த 2007-ஆம் ஆண்டு டிசம்பர் 27-ஆம் தேதி மத்தியபிரதேச மாநிலம் தேவாஸில் வைத்து துப்பாக்கியால் சுடப்பட்டு கொல்லப்பட்டார்.

ஸம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு வழக்கில் கைதான அஸிமானந்தாவின் வாக்குமூலத்தின் அடிப்படையில் ஜோஷியை கொன்றது ஆர்.எஸ்.எஸ்-காரர்கள்தாம் என்ற உண்மை வெளியானது.

ஜோஷி கொல்லப்பட்ட தினம் இவருடைய வீட்டிற்கு சென்ற பிரக்யா சிங் ஜோஷியின் பொருட்களையும் இதர ஆதாரங்களையும் அங்கிருந்து கடத்திச் சென்றதாக புலனாய்வுக்குழு கண்டறிந்தது.

செய்தி: தேஜஸ் மலையாள நாளிதழ், நன்றி : பாலைவனத்தூது

 



சமூக ஒற்றுமைக்காக ஏங்கும் இதயங்கள்…

 

 

சமூக ஒற்றுமைக்காக ஏங்கும் இதயங்கள்…

ஸ்லாமிய சமுதாயத்தின் வரலாற்றைப் புரட்டிப்பார்க்கும் போது, அல்லாஹ்வின் இறுதி தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்களுடைய காலத்தோடு ஒன்றுபட்ட, ஒரே சமுதாயம் என்ற கட்டமைப்பு முற்றுப் புள்ளி பெற்றுவிட்டது. நபிகளார் இந்த உலகைப் பிரிந்த நேரத்திலிருந்தே பிரிவினை சக்திகள் சமூகத்திற்குள் ஊடுருவி பிளவு ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த சமூகம் ஒன்று பட்டுவிடக் கூடாது என்பதில் யூதர்களும், கிருத்தவர்களும் குறியாக இருந்தனர். அவர்கள் எவ்வாறு வேதம் அருளப்பட்டபின்னரும் தங்களுக்குள் வேற்றுமையை ஏற்படுத்தி சிதறிப்போனார்களோ அதைப்போன்றே மற்ற சமூகங்களும் ஆகிவிட வேண்டும் என்பதுதான் அவர்களுடைய திட்டம், அவர்களுடைய இந்த சூழ்ச்சியை முறியடித்துக் காட்ட வேண்டும் என்ற நோக்குடன் எந்தெந்த காலத்திலெல்லாம் இஸ்லாமிய சமுதாயம் ஓர் அணியில் ஒன்று சேரவேண்டும் என்ற முயற்சியில் இறங்கியதோ அப்போதெல்லாம் அந்த முயற்சியைத் தகர்ப்பதற்காக இஸ்லாத்தின் எதிரிகள் முழு முயற்சியோடு செயல்பட்டனர். அதில் அவர்கள் வெற்றியும் கண்டார்கள்.

 

பிகளாரின் மறைவுக்குப்பின் 1420 வருடங்கள் ஆகியும் இன்றுவரை நபிகளார் காலத்தில் காணப்பட்ட சமூக ஒற்றுமையை காண முடியவில்லை. கொள்கையை காரணமாகக் கொண்டு பிரிந்தார்கள் அரசியல் காரணங்களுக்காகப் பிரிந்தார்கள். ஆட்சியைப் பிடிக்க வேண்டுமென்பதற்காக பிரிந்தார்கள். குர்ஆனையும் சுன்னாவையும் விளங்குவதில் ஒவ்வொருவரும் சுயவிளக்கங்களைக் கொடுத்து பிரிந்தார்கள் தனி நபர்களின் மீதுள்ள பற்றின் காரணத்தினால் பிரிந்தார்கள் ஒவ்வொரு சாராரும் தங்களுடைய போங்கை நியாயப்படுத்துவதற்காக குர்ஆன் வசனங்களையும், ஹதீஸ் ஆதாரணங்களையும் தான் பயன்படுத்தினார்கள்.

 

ன்றய இஸ்லாமிய சமூகத்தையும் அது எதிர்நோக்கியுள்ள அவல நிலைகளையும் கொஞ்சம் திரும்பிப் பார்க்கும் போது கடந்த காலங்களிலே சந்திக்க அதே நிலையைத் தான் சிறிதும் மாற்றமின்றி சந்தித்துக் கொண்டிருக்கிறது. சர்வதேச அளவிலும் அப்படித்தான் இருக்கிறது. வட்டார அளவிலும் அப்படித்தான் இருக்கிறது.

 

நாம் வாழும் தமிழகத்தை எடுத்துக் கொண்டால் என்றைக்காவது இஸ்லாமிய சமுதாயம் ஒன்றுபட்டு ஒர்அணியில் ஒரே தலைமையின் கீழ் ஒன்றிணைந்து செயல்பட்ட வரலாற்றை நம்மால் பார்க்க முடியவில்லை. நம்மைப் படைத்த இறைவன் அல்லாஹ்வை புரிந்து கொள்வதிலும் ஒன்றுபட்டவர்களாக இருக்கவில்லை.

 

முதாயத்தின் இப்படிப்பட்ட அவல நிலையை கண்கூடாக பார்த்தபோது தான் அறியாமையிலிருக்கின்ற மக்களுக்கு அல்லாஹ்வை புரிய வைத்து, அவன் தான் இறைவன் அவனை மட்டுமே வணங்க வேண்டும் என்ற ஓர் இறைக் கொள்கையை நிலை நாட்டுகின்ற விஷயத்திலாவது சமூகத்தை ஒன்று கூட்டிவிடலாம் என்ற நல்லெண்ணத்தோடு, அல்லாஹ் ஒருவனை மட்டுமே வணங்க வேண்டும். அவனுக்கு எதையும் இணையாக்க மாட்டோம் என்று எல்லோரும் சபதம் ஏற்போம் என்ற முழக்கத்தோடு இஸ்லாமிய சமூகத்தை ஒன்றிணைக்கும் முயற்சியில் வீதியில் இறங்கினோம். அதனுடைய நல்ல பலனை கண் கூடாகக் கண்டோம். இலட்சியப் பயணத்தில் வெற்றியை நோக்கி வீறு நடை போட்டுக் கொண்டிருப்பது சத்தியத்தின் எதிரியான சாத்தானுக்கு எப்படி நிம்மதியைத் தரும், வெண்ணை திரண்டு வரும் நேரத்தில் பாணையை உடைத்த கதை போன்று, அல்லாஹ்வைப் பற்றி சரியாக புரியாமலிருந்த மக்கள் தெளிவுபெற்று அதிலேயே தங்களை ஐக்கியமாக்கிக் கொள்ள வேண்டும் என்று முழு மூச்சோடு செயல்பட்டுக் கொண்டிருந்த வேளையில் சாத்தான் சமூகத்தில் ஊடுருவி, சிந்தனை சலவை செய்து, வேறுபக்கம் சமூகத்தின் சிந்தனையைத் திருப்பும் முயற்சியில் இறங்கினான். பலவீனமான மனமுடைய மனிதன் திசைமாறி போகும் நிலை உருவாகி இன்று பல்வேறு திசைகளிலும் சமூகம் சிதறிச் சென்று கொண்டிருக்கிறது.

 

தைப்பார்த்து கவலைப்பாடத நல்லுள்ளங்கள் இல்லாமல் இருக்க முடியாது. நாளுக்கு நாள் அதிகாரித்துச் செல்லும் பிரிவினை வாதம் முற்றுப் பெற்றுவிடாதா? ஒர் அணியில் ஒன்று பட்டுவிட மாட்டார்களா? என்று ஏங்கும் நெஞ்சங்களின் உணர்வுகளை நியாயமானவை.

 

இவர்களை எப்படி ஒருங்கிணைப்பது? ஏற்கனவே ஒன்று படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளெல்லாம் தவிடு பொடியாக்கப்பட்டு விட்டதே இனிமேலும் முயற்சிகள் பயனளிக்குமா? என்றெல்லாம் கேள்விகள் எழுவதில் தவறில்லை. அதேநேரத்தில், சிலர் வரட்டுத்தனமான வாதங்களையும், முரட்டுத்தனமான அனுகுமுறைகளையும், கசப்பான வார்த்தை பிரயோகங்களையும் பயன்படுத்தி, சமூகத்தை தாங்கள் விரும்புகின்ற விதத்தில் ஒன்று சேர்த்துவிடலாம் என மனப்பால் குடித்துவருகின்றனர். இவர்களின் அனுகுமுறைகளினால் சமூகம் எதிர்விளைவுகளைத்தான் சந்தித்துக் கொண்டிருக்கிறது. குரோதமும் விரோதமும் கூடிக் கொண்டே போகிறது. இந்த அனுகுமுறையினால் எந்த வித பலனையும் எதிர்பார்க்க முடியவில்லை. இருக்கின்ற அணிகளோடு புதிதாக ஒரு அணியைத் தான் உருவாக்க முடிந்ததே தவிர, ஓர் அணியில் ஒன்று சேர்க்க முடியவில்லை.

இஸ்லாமிய சமூகத்தை ஒர் அணியில் ஒன்று சேர்க்க ஒரேவழி அல்லாஹ்வால் மனித சமூகத்திற்கு வழிகாட்டுவதற்காக தேர்ந்தெடுத்து அனுப்பப்பட்ட இறைத்தூதர்கள் எந்த இலட்சியத்தை முன்வைத்து மக்களை ஒன்றிணைக்க பாடுபட்டார்களோ அதே இலட்சியத்தின் பால் மக்களை அழைத்தால் மட்டுமே அவர்களை ஒர் அணியில் ஒன்று சேர்க்க முடியும்.

 

அதாவது அல்லாஹ், ஒருவனை மட்டுமே வணங்குங்கள் அவனுக்கு யாதொன்றையும் இணையாக்காதீர்கள் என்ற இந்த இலட்சியத்தை சரியான முறையில் மக்களுக்கு புரிய வைக்கும் முயற்சியில் மட்டும் எல்லோரும் இணைந்து பாடுபடுவார்களானால் அல்லாஹ்வின் நாட்டத்தால் நிச்சயம் சமுதாயத்தை ஒர் அணியில் திரட்டி விடலாம். இந்த இலட்சியத்தை நிலைநாட்டும் முயற்சியைத்தான் ஜம்யிய்யது அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ் தமிழ் மக்களிடையில் 25 ஆண்டுகளாக மேற்கொண்டு வருகிறது.

 

இன்று பலர் இந்த அடிப்படை இலட்சியத்தை மறந்துவிட்டு, அடிப்படை இல்லாத சில்லறை விஷயங்களில் மூக்கை நூழைத்து அதை பெரிது படுத்திக்கொண்டிருப்பதால் தான் சமூகம் சிதறிக் கொண்டிருக்கிறது.

 

எல்லா இறைத்தூதர்களும் தங்களுடைய மக்களை இப்படித்தான் அழைத்தார்கள்….

 

”என்னுடைய சமூகமே! அல்லாஹ்வை மட்டுமே வணங்குங்கள் உங்களுக்கு அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை” (அல்குர்ஆன் 11:50)

 

அல்லாஹ்வின் இறுதித் தூதர் சொன்னார்கள்: ”நீங்கள் லாயிலாஹ் இல்லல்லாஹ் என்று சொல்லுங்கள் வெற்றிபெற்று விடுவீர்கள்.

(நூல் : ஸஹீஹ் இப்னு குஸைமா)

நன்றி: அல்-ஜன்னத் ஜனவரி-2011 தலையங்கம்

மெயிலில்…ABU SITHIQ ( siddiquetsi@gmail.com )

 

சமூக ஒற்றுமைக்காக ஏங்கும் இதயங்கள்…

இஸ்லாமிய சமுதாயத்தின் வரலாற்றைப் புரட்டிப்பார்க்கும் போது, அல்லாஹ்வின் இறுதி தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்களுடைய காலத்தோடு ஒன்றுபட்ட, ஒரே சமுதாயம் என்ற கட்டமைப்பு முற்றுப் புள்ளி பெற்றுவிட்டது. நபிகளார் இந்த உலகைப் பிரிந்த நேரத்திலிருந்தே பிரிவினை சக்திகள் சமூகத்திற்குள் ஊடுருவி பிளவு ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த சமூகம் ஒன்று பட்டுவிடக் கூடாது என்பதில் யூதர்களும், கிருத்தவர்களும் குறியாக இருந்தனர். அவர்கள் எவ்வாறு வேதம் அருளப்பட்டபின்னரும் தங்களுக்குள் வேற்றுமையை ஏற்படுத்தி சிதறிப்போனார்களோ அதைப்போன்றே மற்ற சமூகங்களும் ஆகிவிட வேண்டும் என்பதுதான் அவர்களுடைய திட்டம், அவர்களுடைய இந்த சூழ்ச்சியை முறியடித்துக் காட்ட வேண்டும் என்ற நோக்குடன் எந்தெந்த காலத்திலெல்லாம் இஸ்லாமிய சமுதாயம் ஓர் அணியில் ஒன்று சேரவேண்டும் என்ற முயற்சியில் இறங்கியதோ அப்போதெல்லாம் அந்த முயற்சியைத் தகர்ப்பதற்காக இஸ்லாத்தின் எதிரிகள் முழு முயற்சியோடு செயல்பட்டனர். அதில் அவர்கள் வெற்றியும் கண்டார்கள்.

 

நபிகளாரின் மறைவுக்குப்பின் 1420 வருடங்கள் ஆகியும் இன்றுவரை நபிகளார் காலத்தில் காணப்பட்ட சமூக ஒற்றுமையை காண முடியவில்லை. கொள்கையை காரணமாகக் கொண்டு பிரிந்தார்கள் அரசியல் காரணங்களுக்காகப் பிரிந்தார்கள். ஆட்சியைப் பிடிக்க வேண்டுமென்பதற்காக பிரிந்தார்கள். குர்ஆனையும் சுன்னாவையும் விளங்குவதில் ஒவ்வொருவரும் சுயவிளக்கங்களைக் கொடுத்து பிரிந்தார்கள் தனி நபர்களின் மீதுள்ள பற்றின் காரணத்தினால் பிரிந்தார்கள் ஒவ்வொரு சாராரும் தங்களுடைய போங்கை நியாயப்படுத்துவதற்காக குர்ஆன் வசனங்களையும், ஹதீஸ் ஆதாரணங்களையும் தான் பயன்படுத்தினார்கள்.

 

இன்றய இஸ்லாமிய சமூகத்தையும் அது எதிர்நோக்கியுள்ள அவல நிலைகளையும் கொஞ்சம் திரும்பிப் பார்க்கும் போது கடந்த காலங்களிலே சந்திக்க அதே நிலையைத் தான் சிறிதும் மாற்றமின்றி சந்தித்துக் கொண்டிருக்கிறது. சர்வதேச அளவிலும் அப்படித்தான் இருக்கிறது. வட்டார அளவிலும் அப்படித்தான் இருக்கிறது.

 

நாம் வாழும் தமிழகத்தை எடுத்துக் கொண்டால் என்றைக்காவது இஸ்லாமிய சமுதாயம் ஒன்றுபட்டு ஒர்அணியில் ஒரே தலைமையின் கீழ் ஒன்றிணைந்து செயல்பட்ட வரலாற்றை நம்மால் பார்க்க முடியவில்லை. நம்மைப் படைத்த இறைவன் அல்லாஹ்வை புரிந்து கொள்வதிலும் ஒன்றுபட்டவர்களாக இருக்கவில்லை.

 

சமுதாயத்தின் இப்படிப்பட்ட அவல நிலையை கண்கூடாக பார்த்தபோது தான் அறியாமையிலிருக்கின்ற மக்களுக்கு அல்லாஹ்வை புரிய வைத்து, அவன் தான் இறைவன் அவனை மட்டுமே வணங்க வேண்டும் என்ற ஓர் இறைக் கொள்கையை நிலை நாட்டுகின்ற விஷயத்திலாவது சமூகத்தை ஒன்று கூட்டிவிடலாம் என்ற நல்லெண்ணத்தோடு, அல்லாஹ் ஒருவனை மட்டுமே வணங்க வேண்டும். அவனுக்கு எதையும் இணையாக்க மாட்டோம் என்று எல்லோரும் சபதம் ஏற்போம் என்ற முழக்கத்தோடு இஸ்லாமிய சமூகத்தை ஒன்றிணைக்கும் முயற்சியில் வீதியில் இறங்கினோம். அதனுடைய நல்ல பலனை கண் கூடாகக் கண்டோம். இலட்சியப் பயணத்தில் வெற்றியை நோக்கி வீறு நடை போட்டுக் கொண்டிருப்பது சத்தியத்தின் எதிரியான சாத்தானுக்கு எப்படி நிம்மதியைத் தரும், வெண்ணை திரண்டு வரும் நேரத்தில் பாணையை உடைத்த கதை போன்று, அல்லாஹ்வைப் பற்றி சரியாக புரியாமலிருந்த மக்கள் தெளிவுபெற்று அதிலேயே தங்களை ஐக்கியமாக்கிக் கொள்ள வேண்டும் என்று முழு மூச்சோடு செயல்பட்டுக் கொண்டிருந்த வேளையில் சாத்தான் சமூகத்தில் ஊடுருவி, சிந்தனை சலவை செய்து, வேறுபக்கம் சமூகத்தின் சிந்தனையைத் திருப்பும் முயற்சியில் இறங்கினான். பலவீனமான மனமுடைய மனிதன் திசைமாறி போகும் நிலை உருவாகி இன்று பல்வேறு திசைகளிலும் சமூகம் சிதறிச் சென்று கொண்டிருக்கிறது.

 

இதைப்பார்த்து கவலைப்பாடத நல்லுள்ளங்கள் இல்லாமல் இருக்க முடியாது. நாளுக்கு நாள் அதிகாரித்துச் செல்லும் பிரிவினை வாதம் முற்றுப் பெற்றுவிடாதா? ஒர் அணியில் ஒன்று பட்டுவிட மாட்டார்களா? என்று ஏங்கும் நெஞ்சங்களின் உணர்வுகளை நியாயமானவை.

 

இவர்களை எப்படி ஒருங்கிணைப்பது? ஏற்கனவே ஒன்று படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளெல்லாம் தவிடு பொடியாக்கப்பட்டு விட்டதே இனிமேலும் முயற்சிகள் பயனளிக்குமா? என்றெல்லாம் கேள்விகள் எழுவதில் தவறில்லை. அதேநேரத்தில், சிலர் வரட்டுத்தனமான வாதங்களையும், முரட்டுத்தனமான அனுகுமுறைகளையும், கசப்பான வார்த்தை பிரயோகங்களையும் பயன்படுத்தி, சமூகத்தை தாங்கள் விரும்புகின்ற விதத்தில் ஒன்று சேர்த்துவிடலாம் என மனப்பால் குடித்துவருகின்றனர். இவர்களின் அனுகுமுறைகளினால் சமூகம் எதிர்விளைவுகளைத்தான் சந்தித்துக் கொண்டிருக்கிறது. குரோதமும் விரோதமும் கூடிக் கொண்டே போகிறது. இந்த அனுகுமுறையினால் எந்த வித பலனையும் எதிர்பார்க்க முடியவில்லை. இருக்கின்ற அணிகளோடு புதிதாக ஒரு அணியைத் தான் உருவாக்க முடிந்ததே தவிர, ஓர் அணியில் ஒன்று சேர்க்க முடியவில்லை.

இஸ்லாமிய சமூகத்தை ஒர் அணியில் ஒன்று சேர்க்க ஒரேவழி அல்லாஹ்வால் மனித சமூகத்திற்கு வழிகாட்டுவதற்காக தேர்ந்தெடுத்து அனுப்பப்பட்ட இறைத்தூதர்கள் எந்த இலட்சியத்தை முன்வைத்து மக்களை ஒன்றிணைக்க பாடுபட்டார்களோ அதே இலட்சியத்தின் பால் மக்களை அழைத்தால் மட்டுமே அவர்களை ஒர் அணியில் ஒன்று சேர்க்க முடியும்.

 

அதாவது அல்லாஹ், ஒருவனை மட்டுமே வணங்குங்கள் அவனுக்கு யாதொன்றையும் இணையாக்காதீர்கள் என்ற இந்த இலட்சியத்தை சரியான முறையில் மக்களுக்கு புரிய வைக்கும் முயற்சியில் மட்டும் எல்லோரும் இணைந்து பாடுபடுவார்களானால் அல்லாஹ்வின் நாட்டத்தால் நிச்சயம் சமுதாயத்தை ஒர் அணியில் திரட்டி விடலாம். இந்த இலட்சியத்தை நிலைநாட்டும் முயற்சியைத்தான் ஜம்யிய்யது அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ் தமிழ் மக்களிடையில் 25 ஆண்டுகளாக மேற்கொண்டு வருகிறது.

இன்று பலர் இந்த அடிப்படை இலட்சியத்தை மறந்துவிட்டு, அடிப்படை இல்லாத சில்லறை விஷயங்களில் மூக்கை நூழைத்து அதை பெரிது படுத்திக்கொண்டிருப்பதால் தான் சமூகம் சிதறிக் கொண்டிருக்கிறது.

 

எல்லா இறைத்தூதர்களும் தங்களுடைய மக்களை இப்படித்தான் அழைத்தார்கள்….

 

”என்னுடைய சமூகமே! அல்லாஹ்வை மட்டுமே வணங்குங்கள் உங்களுக்கு அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை” (அல்குர்ஆன் 11:50)

அல்லாஹ்வின் இறுதித் தூதர் சொன்னார்கள்: ”நீங்கள் லாயிலாஹ் இல்லல்லாஹ் என்று சொல்லுங்கள் வெற்றிபெற்று விடுவீர்கள்.

(நூல் : ஸஹீஹ் இப்னு குஸைமா)

நன்றி: அல்-ஜன்னத் ஜனவரி-2011 தலையங்கம்



இனப்படுகொலையின் துயரம் இன்னமும் குஜராத் தை வேட்டையாடுகிறது – ஷக்கீல் அன்ஸாரி
December12, 2010, 3:51 பிற்பகல்
Filed under: Abu Adhil | குறிச்சொற்கள்: ,

இனப்படுகொலையின் துயரம் இன்னமும் குஜராத்தை வேட்டையாடுகிறது – ஷக்கீல் அன்ஸாரி

கோழிக்கோடு,டிச.12:குஜராத்தில் இனப்படுகொலை நிகழ்ந்து 8 ஆண்டுகள் கழிந்த பிறகும் குஜராத் முஸ்லிம் சமூகம் சாதாரண நிலையை இதுவரை அடையவில்லை என பிரபல மனித உரிமை ஆர்வலர் டாக்டர்.ஷக்கீல் அன்ஸாரி தெரிவித்தார்.

இனப்படுகொலையின் துயரம் இன்னமும் குஜராத்தை வேட்டையாடுகிறது. துயர்துடைப்பு நடவடிக்கைகளுக்கோ, இழப்பீடுகளை வழங்குவதற்கோ அரசு ஆர்வம் காண்பிக்கவில்லை. இனப்படுகொலைக்கு பிறகு மாநிலத்தில் முதலீடுகளும், வளர்ச்சியும் குறைந்துள்ளது என ஷக்கீல் அன்ஸாரி தெரிவித்தார்.

குஜராத் இனப்படுகொலையில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு சட்ட உதவிகள் அளிப்பதில் முன்னணியில் உள்ள அமைப்பான அசோசியேசன் ஃபார் ப்ரொட்டக்‌ஷன் ஆஃப் சிவில் ரைட்ஸின் தேசிய கன்வீனரான அன்ஸாரி கோழிக்கோட்டில் நடைபெறும் மனித உரிமை மாநாட்டில் கலந்துக்கொள்வதற்காக கேரள மாநிலத்திற்கு வருகைத்தந்துள்ளார்.

அரசியல் ஆதாயத்திற்காக நடத்தப்பட்ட இந்த இனப்படுகொலையில் குஜராத் அரசிற்கும் பங்கிருப்பதால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு சமுதாயமாக மாறியுள்ளனர். பல வழக்குகளும் நீதிமன்றத்தை அடையவில்லை. பாப்ரி மஸ்ஜித் இடிக்கப்பட்டது போன்ற சோதனைதான் குஜராத் இனப்படுகொலையும். ஆனால், இதற்கெதிராக மனித உரிமை ஆர்வலர்கள் சிலர் உறுதியாக நின்று போராடியதன் காரணமாக சில வழக்குகளிலாவது வெற்றிக் கிடைத்துள்ளது.

காங்கிரசும், பா.ஜ.கவும் ஆதிக்கம் செலுத்தும் குஜராத்தில் ஏதேனும் ஒரு அரசியல் கட்சியில் சேரவேண்டும் என்ற துர்பாக்கிய நிலையில் முஸ்லிம்கள் உள்ளனர். முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் வாக்கு பதிவு குறைவதும், ஏகாதிபத்திய முறையில் தேர்தல் நடப்பதாலும் மோடி வெற்றிப் பெறுகிறார். ஆனால், அரசியல் ரீதியாக பா.ஜ.கவுக்கு சோர்வு ஏற்பட்டுள்ளது. ஆர்.எஸ்.எஸ்ஸின் ஷாகாக்களில் 33 சதவீதம் குறைவு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு ஷக்கீல் அன்ஸாரி தெரிவித்தார்.

வழக்குகளை நடத்துவதிலும்,புனர்வாழ்வுத் திட்டங்களை ஒருங்கிணைப்பதிலும் தலைமை வகித்துவரும் இஸ்லாமிக் ரிலீஃப் கமிட்டி ஆஃப் குஜராத்தின் கன்வீனருமான ஷக்கீல் அன்ஸாரியின் மகனை மோடி அரசு பொய்வழக்கில் கைதுச்செய்து சிறையிலடைத்துள்ளது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ், நன்றி ; பாலைவனத் தூது




Follow

Get every new post delivered to your Inbox.

Join 761 other followers