கோப்பு வகை: அரசியல் | குறிச்சொற்கள்: அரசியல், அறிவிப்பு, இந்தியா, சமூகம், ஜமாத்தே உலமா இ இந்த், பத்வா, முஸ்லிம்கள், வந்தே மாதரம், ஹிந்துத்வா, Newspapers, Rss
இஸ்லாம் மதக் கோட்பாடுகளுக்கு எதிராக இருப்பதால் வந்தே மாதரத்தைப் பாட வேண்டாம்
இஸ்லாம் மதக் கோட்பாடுகளுக்கு எதிராக இருப்பதால் வந்தே மாதரத்தைப் பாட வேண்டாம் என்று முஸ்லிம் அமைப்பு இந்திய முஸ்லிம்களைக் கேட்டுக் கொண்டுள்ளது. பாரதீய ஜனதா கட்சி இதனைக் கடுமையாக எதிர்த்துள்ளது.
உத்திரப் பிரதேச மாநிலம் தியோபந்த் என்ற இடத்தில் ஜமாத்தே உலமா இ இந்த் என்ற இஸ்லாமிய அமைப்பின் 30 ஆவது ஆண்டு பொதுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் முன்னிலையில் அந்த தீர்மானங்கள் வாசிக்கப்பட்டன.
தாருல் உலூம் என்ற மதரசா (வந்தே மாதரத்தை எதிர்த்து) வெளியிட்ட பத்வா சரியே என்று தீர்மானங்களில் ஒன்று கூறுகிறது. இந்த மதரசா 2006 ஆம் ஆண்டு வந்தே மாதரத்தை முஸ்லிம்கள் பாடக் கூடாது என்று பத்வா தீர்ப்பு அளித்திருந்தது.
பாரதீய ஜனதா கட்சித் தலைவர் முரளி மனோகர் ஜோஷி இதனை எதிர்த்துள்ளார். இந்தத் தீர்மானம் இந்திய அரசியல் சட்டத்திற்கு எதிரானது என்றும் இதனை ஒத்துக் கொள்ள முடியாது என்றும் அவர் கூறினார்.
செய்தி : இந்நேரம்.காம்
கோப்பு வகை: அரசியல் | குறிச்சொற்கள்: அமெரிக்கா, கலிபோர்னியா, கல்வி செய்தி, கழிவறை, கேமரா, வெளிநாடு, Newspapers, Uncategorized
கிறித்தவ புத்தகக் கடை கழிவறையில் கேமரா
அமெரிக்கா – கலிபோர்னியாவில் உள்ள சிமி வேலி (Simi Valley) நகரிலுள்ள ஒரு கிறித்தவ புத்தகக் கடையில், வாடிக்கையாளர்கள் அனுமதிக்கப்படும் கழிவறையினுள்ளே ஒரு கேமரா மறைத்து வைக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அங்கு பணிபுரியும் 28 வயது ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
40 வயது பெண் ஒருவர் அந்தக் கடையிலுள்ள கழிவறைக்குள் சென்ற போது, அங்கு ஓரமாய் அடுக்கி வைப்பட்டிருந்த பெட்டிகளின் இடையே கேமரா மறைத்து வைக்கப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியுற்றார். அவரும் அவரது கணவரும் சந்தேகத்திற்கிடமான வகையில் அங்கு இருந்த கேமரா பற்றி போலீஸில் தகவல் தெரிவித்தனர்.
விரைந்து வந்து கேமராவைக் கைப்பற்றிய போலீஸார், அதனை சோதனையிட்ட போது, அந்தக் கடையில் ஊழியர் அதனை அங்கு நிறுவுவது பதிவாகியிருந்தது தெரிந்தது. கேமரா பதிவு செய்வதை அறியாமல் அவர் அதனை நிறுவியதால் கையும் களவுமாய் மாட்டிக் கொண்டார்.
செய்தி : இந்நேரம்.காம்
கோப்பு வகை: அரசியல் | குறிச்சொற்கள்: அமீரகம், அமீரகம் தோப்புத்துறை, அரசியல், அறிவிப்பு, இந்தியா, கல்வி செய்தி, செய்தி, செய்திகள், துபை, வேலை வாய்ப்பு, ஷார்ஜா
துபையில் வேலை வாய்ப்பு ?
குத்தாலம் லியாகத் அலி பேட்டி !
* இந்த பதிவு முதுகளத்தூர் இனையத்தளத்திருந்து…
குத்தாலம் ஏ. லியாகத் அலி (வயது 54) 1976 ஆம் ஆண்டிலிருந்து துபையில் பணிபுரிந்து வருகிறார். சமுதாய நல அமைப்பான ஈமான் அமைப்பின் கல்விக்குழுச் செயலாளராக 10 ஆண்டுகள் சேவை புரிந்த இவர் கடந்த 9 ஆண்டுகளாக ஈமான் பொதுச் செயலாளராகத் தொண்டாற்றி வருகிறார். சட்டத்துறை அலுவலகத்தில் நிதிப்பிரிவில் பணிபுரிந்து வரும் இவர் காயிதே மில்லத் பேரவையின் பொதுச் செயலாளராக இருப்பதுடன் துபை தமிழ்ச் சங்கத்தின் நிறுவன உறுப் பினராகவும் இருந்து வருகிறார். சென்னை வந்திருந்த குத்தாலம் ஏ.லியாகத் அலி துபையில் தற்சமயமுள்ள வேலை வாய்ப்பு குறித்து “இனிய திசைகள்” இதழுக்கு அளித்த பேட்டி இதோ:
? பொருளாதார வீழ்ச்சியால் துபை எந்த அளவுக்குப் பாதித்துள்ளது?
அமெரிக்காவின் பொருளாதார வீழ்ச்சியின் தாக்கம் துபையை வெகு வாகப் பாதித்துள்ளது. குறிப்பாக ரியல் எஸ்டேட்ஸ் கட்டட நிர்மாண நிறுவனங்கள் மிகவும் பாதிப்புக்குள்ளாகி விட்டன. வெளி நாட்டவர் களுடைய முதலீடுதான் துபையின் மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சி யாக அமைந்திருந்தது. இப்போது ஏறக்குறைய 50 சதவிகிதம் வெளி நாட்டவர் முதலீடு கீழிறங்கி விட்டது.
? வெளி நாட்டவர் முதலீடு குறையக் காரணம்?
வெளிநாட்டவர் முதலீடு செய்து மிகப்பெரிய கட்டடப் பணிக ளெல்லாம் மிகச் சிறப்பாக நடைபெற்று வந்தன. அந்த கட்டடப் பணி களுக்கெல்லாம் வங்கிகள் போட்டி போட்டுக் கொண்டு கடன்கள் வழங்கின. இப்போது வங்கிகள் முற்றிலுமாகக் கடன் தருவதை நிறுத்தி விட்டதால் பல கட்டடப் பணிகள் அப்படி அப்படியே நிறுத்தப்படும் நிலை ஏற்பட்டுவிட்டது.
? முற்றிலுமாகக் கட்டடப்பணிகள் நின்று விட்டனவா?
அப்படி இல்லை ஏற்கனவே வங்கிக்கடன் பெற்ற பணிகள் தற்போது நடந்து கொண்டிருக்கின்றன. சமாளிக்கக் கூடிய திறமையுள்ள நிறுவனங்களின் கட்டடப்பணிகள் ஏற்கனவே இருப்பது நடந்து கொண் டிருக்கின்றன. புதிய கட்டுமானத் திட்டங்கள் எதுவும் கிடைக்கவில்லை. பழைய பல கட்டுமானத் திட்டங்களுக்குக்கூட வங்கிக்கடன் கிடைக் காததால் கிடப்பில் கிடக்கின்றன. விமான நிலையக் கட்டடப் பணிகள் கூட இன்னமும் முடிவடையாத நிலையே உள்ளன.
? இதனால் வேலை வாய்ப்பு நிலை என்ன ஆயிற்று?
கட்டுமானப் பொறியாளர்கள், தொழிலாளர்களுக்கான வேலைவாய்ப்பு நாளுக்கு நாள் கூடிக்கொண்டே வந்த நிலைமை மாறி நாளுக்கு நாள் வேலை இழக்கும் பொறியாளர்கள் எண்ணிக்கை பெருகிக் கொண்டே வருவது வேதனை தருவதாக உள்ளது.
? வங்கி மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை எப்படி உள்ளன?
வங்கி மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறையிலும் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது. வங்கிகளில் ஐ.டி. துறை வெகுவாகப் பாதித்துள்ளது. ஒவ்வொரு வங்கியிலும் ஏறக்குறைய 700 பேர் வேலை இழந்துள்ளார் கள்.’அவுட்சோர்சிங்’ இந்தியாவுக்கு வந்துவிட்டதும் இதற்கு முக்கிய காரணமாகும். அப்படி வேலை இழப்பவர்களுக்கு இந்தியாவில் இந்திய சம்பள விகிதப்படி வேலை கிடைக்கச் சில நிறுவனங்கள் உத்தரவாதம் அளித்தபோதிலும் அவை உறுதியானதாக இல்லை. ஐ.டி. துறையைப் பொறுத்தமட்டில் துபையை விட இந்தியாவே சிறந்திருக்கிறதென்று கூறலாம்.
? ஏனைய வணிகத்துறைகள் எப்படி உள்ளன?
பிற வணிகங்கள் எப்போதும் போல் நடைபெற்று வருகின்றன. என்றாலும் ஏறுமுகம் இல்லை. பழைய அதே அளவிலுள்ள தொழி லாளர்களைக் கொண்டே சமாளித்து வருகிறார்கள். நான்கைந்து மாதங் களுக்கு முன்பு இவையும் பாதிக்கப்படுமென்றும் அதனால் வேலை இழப்பு வெகுவாக அதிகரிக்குமென்றும் அச்சமும் பீதியும் ஏற்பட்டன. நல்லவேளை அப்படி எதுவும் நடக்கவில்லை தற்சமயம் பரவாயில்லை யென்றே சொல்லலாம்.
? தற்சமயம் வேலை வாய்ப்பு எந்த நிலையில் உள்ளது?
சி.ஏ, பி.காம், எம்.காம் முதலானவற்றைப் படித்தவர்களுக்குத் தற்போது சராசரியாக வேலை வாய்ப்பு கிடைத்துக் கொண்டிருக்கிறது. வங்கிப்பணிகள், கட்டுமானப் பணிகள் நீங்கலாகப் பிற பணியிடங்களில் வேலை வாய்ப்பு இருக்கவே செய்கிறது. மெட்ரோ ரெயில் திட்டத்தின் கீழ் ரெயில் நிலையப் பணிகளில் வேலைவாய்ப்பு இருக்கிறது. என்றாலும் பழைய வேகமில்லை; ஊதியமும் சற்றுக் குறையவே செய்கிறது.
? பொருளாதாரச் சரிவிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் மீளுமா?
ஐக்கிய அரபு அமீரகத்தில் தற்சமயம் மருத்துவமனை, வீட்டு மனைகள், வணிக வளாகங்கள் முதலியன கட்டும் பணியில் 1372 கட்டு மானத் திட்டங்கள் 900 பில்லியன் டாலர் முதலீட்டில் நடைபெற்று வருகின்றன. 566 கட்டுமானத் திட்டங்கள் பொருளாதாரத் சரிவின் காரணமாகத் தள்ளி வைக்கப்பட்டும். கைவிடப்பட்டுமுள்ளன. என்றாலும் வேலை வாய்ப்பு குறிப்பாக இந்தியர்களுக்கு நிறையவே இருக்கத்தான் செய்கிறது.
செளதி அரேபியாவில் 422 கட்டுமானத் திட்டங்கள் 114 பில்லியன் டாலர் முதலீட்டில் நடைபெற்று வருகின்றன. 18 திட்டங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
கத்தாரில் 124 கட்டுமானத் திட்டங்கள் 42 பில்லியன் டாலர் முதலீட்டில் நடைபெறுகின்றன. 7 திட்டங்கள் கைவிடப்பட்டுள்ளன.
ஓமனில் 38 பில்லியன் டாலர் முதலீட்டில் 95 திட்டங்கள் நடந்து வருகின்றன. 8 திட்டங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
பஹ்ரைனில் 148 திட்டங்கள் 36 பில்லியன் டாலர் முதலீட்டில் நடை பெறுகின்றன. 54 திட்டங்கள் இங்கு நிறுத்தியும் தள்ளியும் வைக்கப் பட்டுள்ளன.
இந்த சரிவிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீட்சி ஏற்படுமெனத் தொழில் அதிபர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
? ஐக்கிய அரபு அமீரக ஜனத்தொகை எவ்வாறு இருக்கிறது?
2990 ஆம் ஆண்டு இறுதிக்குள் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஜனத் தொகை முதன்முறையாக ஐந்து மில்லியன் அளவைக் கடக்க விருக்கிறது. துபை, அபுதாபி, ஷார்ஜா உள்ளிட்ட 7 பகுதிகள் இணைந்து 38 ஆண்டுகளுக்கு முன்பு ஐக்கிய அரபு அமீரகம் உருவாயிற்று. அதன் வரலாற்றில் முதல் முறையாக ஜனத்தொகை அளவு கூடவிருக்கிறது. 2008 ஆம் ஆண்டு இறுதியில் 4.765 மில்லியன் என இருந்தது இவ்வாண்டு இறுதியில் 5.066 மில்லியன் அளவுக்கு உயரும்.
ஜனத்தொகை அளவில் முதலாவதாக இருந்த அபுதாபியை 2008 ஆம் ஆண்டில் துபை விஞ்சியது. துபையில் 2008 ஆம் ஆண்டில் 1.596 மில்லியன் எண்ணிக்கை 2009 ல் 1.722 மில்லியனாக உயர்கிறது. இரண்டாமிடத்திலுள்ள அபுதாபியின் ஜனத்தொகை அளவு 2008ல் 1.559 மில்லியனாக இருந்தது 2009ல் 1.628 மில்லியனாக உயர்கிறது. மூன்றா மிடத்திலுள்ள ஷார்ஜாவின் ஜனத்தொகை 2008ல் 9,46,000 என்ற அளவி லிருந்து 2009ல் 1.017 மில்லியனாக உயர்கிறது.
நான்காமிடத்திலுள்ள அஜ்மானில் 2008ல் இருந்து 2,37,000 என்பது 2009லிலும் அதே அளவு தொடர்கிறது. ராஸல் கைமாவில் ஜனத் தொகை 2,31,000 என 2008ல் இருந்தது. 2009ல் 2,41,000 ஆக உயர்கிறது. புஜீராவில் 1,43,000 (2008) லிருந்து 1,52,000 ஆக உயர்கிறது. உம்மல் குவைனில் 53000 லிருந்து 56000 ஆக உயர்கிறது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் இளைஞர்கள் எண்ணிக்கையே அதிகமாக உள்ளது. 25 முதல் 29 வயதுக்குட்பட்டவர்கள் 2008ல் 7,77,000 பேர் இருந்தனர். இது 2009ல் 8,30,000 ஆக உயர்கிறது. 30 முதல் 34 வயதுக்குட்பட்டவர்கள் 2008ல் 7,54,000 பேர் இருந்தனர். இது 2009ல் 8,06,000 ஆக உயர்கிறது.
? படித்து வரும் இளைஞர்களுக்குத் தாங்கள் கூறும் அறிவுரை?
துபையின் நிலைதான் மோசமே தவிர அபுதாபி, மஸ்கட், கத்தார் போன்ற இடங்களில் கட்டுமானப் பணிகள் சீராக நடைபெற்று வருகின்றன. எனவே கட்டுமானத் தொழில் சார்ந்த படிப்பு படித்தவர்கள் தொழிலாளர்கள் அங்கே வேலை வாய்ப்பினைப் பெற முயற்சிக்கலாம். அபுதாபியில் கட்டுமான நிறுவனங்களுக்கு வங்கிக் கடன் தரப்படுகிறது. இதற்கு அங்குள்ள கலீபாவே ஏற்பாடு செய்துள்ளார். மேலும் அபுதாபியில் இன்னும் 3 மாதங்களில் மெட்ரோ ரெயில் திட்டப்பணிகள் ஆரம்பமாக இருக்கின்றன. எனவே அங்கு வேலை வாய்ப்பு பாதிப்பு வராது.
துபையின் இன்றைய சூழல் இன்ஷா அல்லாஹ் விரைவில் மாறி விடும். இன்னும் இரண்டு ஆண்டுகளுக்குள் முற்றிலும் மாறிவிடும். எனவே இப்போது படித்துக் கொண்டிருக்கிற மாணவர்கள் கவலைப்பட வேண்டாம். அவர்கள் படித்து முடித்து வருவதற்குள் இன்ஷா அல்லாஹ் துபையின் நிலைமை முன்னேற்றமடைந்து விடுமென நம்பலாம். இன்றைக்கு இன்ஜினீயரிங் மோகம் குறைந்து வருவதற்குத் தமிழகப் பொறியியல் கல்லூரிகளில் பல்லாயிரக் கணக்கில் காலி யிடங்கள் ஏற்பட்டுள்ளதே சாட்சியாகும். மருத்துவம், மருத்துவம் சார்ந்த துறைகளில் உலக அளவில் வேலைவாய்ப்பு கூடியிருக்கிறது. மாணவர்கள் அதிலும் கவனம் செலுத்தலாம்.
இறையருளால் எதிர்காலம் சிறப்பாகவே அமையும். தன்னம்பிக்கை யோடு இளைஞர்கள் தங்கள் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
சந்திப்பு : சேயோன்.
நன்றி : இனிய திசைகள் மாத இதழ்,அக்டோபர் 2009
கோப்பு வகை: அரசியல் | குறிச்சொற்கள்: அமீரகம், அமீரகம் தோப்புத்துறை, சமூகம், ஜாக் நியூஸ், த மு மு க, முஸ்லிம், ஷார்ஜா
ஷார்ஜா-வில் நடைபெற்ற இஸ்லாமிய அறிவரங்கம்
நபிகள் நாயகம் முஹம்மது (ஸல்) அவர்களின் வாழ்க்கை முறையிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய படிப்பினைகள் மற்றும் பின்பற்ற வேண்டிய அவசியங்களை வலியுறுத்தும் இஸ்லாமிய அறிவரங்கம் நிகழ்ச்சி அக்டோபர் 23, 2009 வெள்ளிக்கிழமை அன்று ஷார்ஜா ரோலா சதுக்கத்தில் அமைந்துள்ள அல் நஜஃப் ரெஸ்ட்டாரண்ட் அரங்கத்தில் நடைபெற்றது. ஷார்ஜா மண்டல முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக நடைபெற்ற இந்நிகழ்ச்சியை மண்டலப் பொருளாளர் அபுல் ஹசன் துவக்கிவைத்தார்.
நபி (ஸல்) அவர்கள் ஒரு அழகிய முன் மாதிரி என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த அறிவரங்கத்தில் அவருடைய குடும்ப வாழ்க்கையைப் பற்றி மௌலவி ஹிதாயத்துல்லாஹ் நூரி அவர்களும், அரசியல் வாழ்க்கைளைப் பற்றி யாசின் நூருல்லாஹ் அவர்களும், இறையச்சம் பற்றி அப்துல் ரஹ்மான் அவர்களும், சமுதாயப் பணி பற்றி அப்துல் ஹாதி அவர்களும், குண நலன்கள் பற்றி ஹ_சைன் பாஷா அவர்களும், கொடைத்தன்மை பற்றி நாசர் அலிகான் அவர்களும் எடுத்துரைத்தனர்;. அமீரக முமுக பொருளாளர் பொறியாளர் ஜெய்லானி நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார்.
மண்டலத் தலைவர் நெல்லிக்குப்பம் இக்பால் தலைமையிலான குழுவினர் நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். உலகம் போற்றும் மாமனிதரின் வாழவியல் நெறியை பல்வேறு கோணங்களில் தெரிந்துக் கொண்டது மகிழ்ச்சி அளிப்பதாக கலந்துக் கொண்டவர்கள் கருத்து தெரிவித்தனர்.
கோப்பு வகை: அரசியல் | குறிச்சொற்கள்: தோப்புத்துறை, செய்தி, ஹிந்துத்வா, கல்வி செய்தி, சமூகம், இந்தியா, அரசியல், செய்திகள், தட்ஸ் தமிழ், தலித், வேதாரண்யம்
கோவிலுக்குள் நுழைய தலித்களுக்கு உரிமை மறுப்பு – வேதாரண்யத்தில் துப்பாக்கி சூடு
வேதாரண்யம்: வேதாரண்யம் அருகே தலித்களை கோயிலுக்குள் அழைத்துச் சென்றபோது ஊர் மக்கள் கலவரத்தில் ஈடுபட்டதையடுத்து போலீசார் சுப்பாக்கி சூடு நடத்தினர். இதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவுகிறது.
வேதாரண்யம் அருகே உள்ள செட்டிப்புளம் கிராமத்தில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்குள் தலித்கள் அனுமதிக்கபடுவதில்லை. இதை எதிர்த்து பல போராட்டங்கள் நடந்து வந்தன. இந் நிலையில் தலித்களை கோயிலுக்குள் அழைத்துச் செல்ல அரசு நடவடிக்கை எடுத்தது.
ஆர்டிஓ ராஜேந்திரன் தலைமையில் இன்று தலித்துக்கள் ஆலய பிரவேசம் செய்வார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
தலித்துக்களை இன்று காலை ஆர்டிஓ அழைத்து வந்தபோது அதை எதிர்த்து ஊர் மக்கள் திரண்டனர். தலித்துக்களை கோவிலுக்குள் நுழைய அனுமதிக்க மாட்டோம் என்று கூறி கலாட்டா செய்தனர். எதிர்ப்பை மீறி தலித்களை போலீசார் ஆலயத்துக்குள் அழைத்துச் சென்றபோது அவர்கள் மீது கூட்டத்தினர் சரமாரியாக கல் வீச்சு தாக்குதல் நடத்தினர்.
இதையடுத்து கூட்டத்தைக் கலைக்க போலீசார் 10 ரவுண்ட் வானத்தை நோக்கி சுட்டானர்.இதையடுத்து கூட்டம் கூட்டம் கலைந்து ஓடியது. அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவுவதால் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
செய்தி: தட்ஸ் தமிழ்
கோப்பு வகை: அரசியல் | குறிச்சொற்கள்: அமீரகம், இந்நேரம்.காம், இஸ்லாம், உம்ரா, கல்வி செய்தி, சவூதி, செய்தி, செய்திகள், ஜாக் நியூஸ், புனித பயணம், மக்கா மற்றும் மதீனா, ஸ்வைன்ஃபுளு
புனித பயணிகள் யாரும் ஸ்வைன்ஃபுளுவால் மரணம் அடையவில்லை: சவூதி அறிவிப்பு!

ரியாத்: உம்ரா எனப்படும் புனித பயணமாக ரமலான் மாதத்தில் மக்கா மற்றும் மதீனா வந்திருந்த இலட்சக்கணக்கான புனிதபயணிகளில் ஒருவரும் ஸ்வைன்ஃப்ளுவால் மரணம் அடையவில்லை என்று சவூதி சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
கடவுள் கிருபையாலும் சுகாதாரத்துறையின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாகவும் புனித பயணிகளிடையே எச்1 என்1 பரவுவது ஏறக்குறைய முழுவதுமாகவே கட்டுபடுத்தப்பட்டுள்ளது என்று அத்துறை தெரிவித்துள்ளது இது தொடர்பாக புனிதப்பயணம் முடிந்து மீண்டும் நாடு திரும்பிய அரபுகள் மற்றும் முஸ்லிம் நாடுகளை சேர்ந்தவர்களை அந்நாட்டு அரசு கண்காணிப்பு செய்ததில் இதுவரை அவர்கள் யாரும் மரணம் அடைந்ததாக தகவல் இல்லை என்றும் கூறினார்.
மேலும் ரமலானில் மக்காவில் ஒன்பது ஸ்வைன் ஃப்ளு நோயாளிகளும் மதீனாவில் 15 நோயாளிகளும் சிகிச்சைக்கு வந்திருந்ததாக பதிவாகி உள்ளது நாட்டின் பிற பகுதிகளில் இரண்டு பேர்கள் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இவை புனிதப்பயணம் வந்த பயணிகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது மிக மிக குறைவானதுதான் என்றார்.
சவூதியில் புனிதப்யணிகளுக்கு மத்தியில் ஸ்வைன்ஃப்ளு வேகமாக பரவலாம் என்ற அச்சம் மக்களிடயே இருந்ததும் ஈரான் போன்ற சில நாடுகள் தங்கள் விமான சேவைகளை ரத்து செய்ததும் குறிப்பிடத்தக்கது. செய்தி: இந்நேரம்.காம்
கோப்பு வகை: அரசியல் | குறிச்சொற்கள்: ஆழியுரான், இந்தியா, கமல் ஹாசன், தமிழ் சினிமா, பார்ப்பன பக்தி, பார்ப்பனம், பாலைவனத் தூது, முஸ்லிம்கள், ஹிந்து, ஹிந்துத்வா, news, TAMIL CENIMA
உலக நாயகனிடம் வெளிப்பட்ட
பார்ப்பன பக்தி
![[Dasavatharam-Stills-82.jpg]](http://3.bp.blogspot.com/_Vzaj3plME5c/SsSDw7pZCQI/AAAAAAAABtU/k31RXxHux7A/s1600/Dasavatharam-Stills-82.jpg)
ஆரம்பப்பள்ளியின் ஆண்டுவிழா ஒன்றை கொஞ்ச காலத்துக்கு முன்பு காண நேர்ந்தது. தீவிரவாதிகளை விரட்டியடிக்கும் தேச பக்தர்கள் பாத்திரத்தில் குழந்தைகள் நடித்தார்கள். தீவிரவாதிகளாக நடித்த குழந்தைகள் நான்கு பேரும் தஅலையில் இஸ்லாமியர்கள் அணியும் தொப்பி வைத்திருந்தார்கள்.
தொப்பி என்பது மட்டுமே அவர்களைத் தீவிரவாதிகளாக காட்டிக்கொள்ளப் போதுமானதாக இருந்தது. அவர்களுக்கு வேடம் போட்டுவிட்ட ஆசிரியர்கள் அவ்விதம் நினைத்திருக்கிறார்கள். இது அறியாமையால் நிகழும் ஒன்றல்ல.
இந்திய இந்து மனங்களின் உள்ளாக முஸ்லீம் விரோத மனப்போக்கு கேள்விகளுக்கு அப்பாற்பட்டு கட்டி எழுப்பப்பட்டிருக்கிறது. அதன் வெளிப்பாடுதான் குழந்தைகளின் மனதிலும் முஸ்லீம் விரோத மனப்பாங்கை உருவாக்கும் நிலை.
இந்த இந்து இந்திய ஆதிக்க மனோபாவத்தை நியாயப்படுத்தியும், ஒடுக்கப்படும் தேசிய இனமான இஸ்லாமியர்களை மலினப்படுத்தியும் சித்தரிக்கும் திரைக்காவியம்தான் உன்னைப்போல் ஒருவன்.
இந்திய பார்ப்பன மனநிலையும், பார்ப்பனியத்தை உள்வாங்கிக்கொண்ட மிடிள் கிளாஸ் மனநிலையும் எப்போதும் ‘சமூக அக்கறை’ விஷயத்தில் ஒரே புள்ளியில் சந்திக்கும். இவர்களின் பிரச்னை எல்லாம் சாலையில் ஸ்டாப் லைனைத் தாண்டி வண்டியை நிறுத்தக்கூடாது, தெருவில் எச்சில் துப்பக்கூடாது, சிக்னலில் பிச்சை எடுக்கக்கூடாது, பொது இடங்களில் உரக்கப்பேசக்கூடாது… இவைகள்தான். அதுவெல்லாம் நடந்தால் அவதாரங்கள் எடுத்து அழித்தொழிப்பார்கள்.
‘தீவிரவாதத்துக்கு தீவிரவாதம் தீர்வில்லை’ என்று குருதிப்புனலில் அகிம்சைப் பேசிய கமல்ஹாசன், இதில் தீவிரவாதத்துக்குத் தீவிரவாதமே தீர்வு என்கிறார். நாட்டில் குண்டு வைத்த நான்கு தீவிரவாதிகளை கடத்தி இவர் குண்டு வைத்து அழிக்கிறார். அந்த நான்கில் மூன்று பேர் முஸ்லீம்கள். ஒரே ஒருவர் மட்டும் இந்து, அவர் அப்பாவி கோயிந்து. அவருக்கு ஒன்றுமே தெரியாது. ‘தெரியாதத்தனமாக’ தீவிரவாதிகளுக்கு வெடிமருந்து சப்ளை செய்தவர். ஆனால் மற்ற மூன்று முஸ்லீம்களும் ‘புனிதப்போர்’ என்றும், ‘கபீர்களை அழிக்க வேண்டும்’ என்றும் எப்போதும் நரம்புப் புடைக்கத் தீவிரவாதம் பேசுபவர்கள். ஆக முஸ்லீம்கள் திட்டமிட்டு குண்டு வைக்கிறார்கள், இந்துக்கள் ஒரு சிலர் ‘தெரியாதத்தனமாக’ அந்த ‘சதிவலை’யில் சிக்கிகொள்கிறார்கள். இதுதான் கமல் சொல்ல வரும் நியதி.
அட ங்கோ… குஜராத்தில் 3,000 இஸ்லாமியர்களை தெருத்தெருவாகத் துரத்திக் கொன்றொழித்தீர்களே… அது தெரியாதத்தனமாக நடந்ததா? மாலேகானில் குண்டு வைத்தது அப்பாவித்தனத்தின் வெளிப்பாடா?
கமல் கட்டமைக்க விரும்பும் தீவிரவாதம் குறித்த கருத்து அப்பட்டமான பாஸிஸத்தன்மை உடையது . தன்னுடன் பேச்சுவார்த்தை நடத்த வரும் அதிகாரியின் பெயர் ‘ஆரிஃப்’ என்ற உடனேயே மல்லாந்துப் பார்த்து பெருமூச்சு விடுகிறார். ‘ஆரிஃப் மீது ஒரு கண் இருக்கட்டும்’ என்று மோகன்லால் கேரக்டர் சொல்கிறது. ஆனால் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கச் செல்லும்போது கமல் தன் பெயராகச் சொல்வது சீனிவாச ராமானுஜம். தன் காதாபாத்திரத்துக்குத் தேர்ந்தெடுக்கும் போலிப் பெயரைக் கூட ஸ்ரீரங்கத்து மண் வாசனையோடுத் தேர்ந்தெடுக்கும் கமல், ஆரிஃப் என்ற பெயரைக் கேட்டதும் முகத்தில் காட்டும் உணர்ச்சிகளில் இற்று விழுகிறது கமலின் முற்போக்கு பூச்சு.
தீவிரவாதத்துக்குத் தீவிரவாதம்தான் தீர்வு என்றால் அவர்களும் அதைத்தானே செய்கிறார்கள? முஸ்லீம் செய்தால் தீவிரவாதம், நீ செய்தால் தேசப்பற்றா? ‘இஸ்லாமியத் தீவிரவாதம்’ பற்றி ரொம்ப கவலைப்படும் கமல்ஹாசனை, நாள்தோறும் தமிழகத்திலும், இந்தியாவிலும் நடந்துவரும் ஆயிரக்கணக்கான இந்து மத, ஆதிக்க சாதிய ஒடுக்குமுறைகள் எவ்விதத்தில் பாத்திருக்கின்றன? அதைப்பற்றி எப்போதாவது வெளிப்படையாகப் பேசியதுண்டா? பேசியிருக்கிறார்.
தென் மாவட்ட கலவரங்கள் துளிர்விடுவதற்கு முன்பாக ‘தேவர் மகன்’ என்ற தேவர் சாதிப் பெருமை பேசும் திரைப்படத்தை உருவாக்கினார். அதில் இளையராஜா என்னும் தலித்தைப் பயன்படுத்தி ‘போற்றிப் பாடடி பெண்ணே..’ என்ற தேவர் சாதிக்கான தேசிய கீதத்தை உருவாக்கித் தந்தார். அதே தந்திரக்கார புத்திதான் இப்போது மனுஷயப்புத்திரன் (எ) ஹமீது என்னும் இஸ்லாமியரைப் பயன்படுத்தி உன்னைப்போல் ஒருவனில் பாடல் எழுத வைத்திருக்கிறது. நடுநிலைமையைக் காப்பாற்றவும், ‘பாருங்கப்பா… ஒரு முஸ்லீமே வேலைப் பார்த்திருக்கார்?’ என்று சப்பைக் கட்டு கட்டவுமான ஏற்பாடு. இதே வேலையைதான் அப்துல் கலாம் மூலம் பா.ஜ.க. செய்தது. தனது சூலாயுதத்தில் சொட்டிய முஸ்லீம் மக்களின் ரத்தக்கறையை அப்துல் கலாம் என்னும் இஸ்லாமியரைக் கொண்டு பா.ஜ.க. மறைக்க முயன்றதும், உன்னைப்போல் ஒருவன் என்னும் இந்துத்துவ பிரதியின் காவிச் சாயத்தை மனுஷயப்புத்திரனைப் பயன்படுத்தி கமல் சமன் செய்யப் பார்ப்பதும் ஒரே விதமான அரசியல்தான். (ஆனா ஹமீது இதை நிச்சயம் ஒத்துக்கொள்ள மாட்டார். பாவம் அவருக்கு கமலை புகழ்ந்து விஜய் டி.வி.யில் கவிபாடவே நேரம் இல்லை)
இப்படி ஆதிக்க சாதி பெருமைகள் பேசும் , இஸ்லாமிய எதிர்ப்பு சமூக மனநிலையை ஊக்குவிக்கும் படங்களை எடுப்பதில் ஆர்வம் காட்டும் இதே கமல்தான் மிக அண்மையில் ‘என்னால் ஈழப் பிரச்னையை சினிமாவாக எடுக்க முடியாது’ என்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார். ஒரு கலைஞன் எதைப் பேச வேண்டும் என்று புறசக்திகள் தீர்மானிப்பதை ஆதரிக்க முடியாது. ஆனால் அப்படி பேசும், பேச மறுக்கும் செய்திகளுக்கு பின்னுள்ள அரசியலை நாம் பேசத்தான் வேண்டியிருக்கிறது. ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதையும், லட்சக்கணக்கான மக்கள் முடமாக்கப்பட்டிருப்பதையும் பற்றி தன்னால் சினிமா எடுக்க முடியாது என்று நேர்மையாக ஸ்டேட்மென்ட் கொடுக்கும் கமல்ஹாசன், இதே நேர்மையை இதர விஷயத்திலும் கடைபிடிக்க மறுப்பது ஏன்? பொதுப் பிரச்னைகளில் பூடகமான ஒரு மௌனத்தையேத் தொடர்ந்து பராமரிக்கும் கமல் மிக நுணுக்கமாக தசாவதாரம் முதற்கொண்டு தனது பார்ப்பன மேல்நிலை சாதியாக்கத்தைத் நியாயப்படுத்தி வந்திருக்கிறார்.
கமல் வகையறா முற்போக்கு பார்ப்பனர்கள் பேணும் நடுநிலையின் அரசியல் ஒரே புள்ளியில் சந்திக்கக்கூடியது. அண்மையில் குமுதத்தில் காஞ்சீபுரம் படத்துக்கு தேசிய விருது கொடுக்கப்பட்டிருப்பதைக் கண்டித்து கட்டுரை எழுதியிருந்தார் ஞாநி. ‘காஞ்சீபுரம் ஒரு செயற்கையாக செய்யப்பட்டப் படம். அதில் இயல்புத்தன்மை இல்லை’ என்று அதில் சொல்லியிருக்கிறார். அது சரியானதே. அது ஒரு மிக செயற்கையான படம்தான். ஆனால் கட்டுரையின் அடுத்த பத்தியில், ‘அதே வருடத்தில் வேறு சில விருதுக்குத் தகுதியான நல்ல திரைப்படங்களும் வந்திருக்கின்றன’ என்று ஞாநி பட்டியிலிடும் படங்களின் வரிசையில் ‘எவனோ ஒருவன்’ என்ற திரைப்படத்தின் பெயரும் இருக்கிறது. பெரிய பொருட்செலவுடன் மாதவன் தயாரித்து நடித்த ‘எவனோ ஒருவன்’, மிக மோசமான மய்யப்படுத்தப்பட்டப் பார்ப்பன பிரதி.
தெருவோரத்தில் சுத்தமில்லாமல் தள்ளுவண்டி கடை நடத்துபவரையும், பெட்டிக் கடையில் ஒரு ரூபாய் சேர்த்து விற்கும் சிறு வியாபாரியையும் போட்டுத்தள்ளச் சொல்லும் அந்த பாசிஸ்ட் படத்தைதான் சிறந்த படம் என்று போகிறப் போக்கில் பிட்டு போடுகிறார் ஞாநி.
முஸ்லீம்களுக்கு எதிரான வெகுமக்களின் மனநிலையை கட்டி எழுப்புவதிலும்,பராமரிப்பதிலும் இவர்கள் அனைவருக்கும் சம அளவுக்கு பங்குண்டு. இன்று, ‘நான் ஒரு முஸ்லீம்’ என்று சொல்லிக்கொண்டு சென்னை உள்பட தமிழ்நாட்டின் எந்த நகரத்திலும் அத்தனை சுலபமாக வாடகைக்கு வீடு பிடித்துவிட முடியாது. முஸ்லீம் என்ற ஒரே காரணத்துக்காக அவர்களுக்கு வாடகைக்குக் கூட வீடு தரப்படுவது இல்லை. சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஒருவர், முஸ்லீம் மாணவன் தாடி வைத்துக்கொண்டு பள்ளிக்கூடம் சென்றதால் பள்ளியில் இருந்து நீக்கப்பட்டது தொடர்பான வழக்கில், ‘இதை அனுமதித்தால் பள்ளிக்கூட வளாகம் தாலிபான் மயமாகிவிடும்’,என்று வெளிப்படையாகத் தீர்ப்பே சொல்கிறார். பொதுப்புத்தியில் முஸ்லீம்களுக்கு எதிரான மனப்போக்கு மிக வலுவாக அணுதினமும் உருவாக்கப்படுகிறது. இதே வேலையை மேற்கொண்டும் ஒரு படி முன்னேற்றி வைத்ததன்றி இந்த திரைப்படம் சாதித்தது எதுவுமில்லை. கடந்த 10 ஆண்டுகளில் வெளியானதிலேயே மிக மோசமான முஸ்லீம் விரோதத் திரைப்படம் இதுதான்.
உண்மையில் கமல் இப்படி மொட்டை மாடிக்குப் போய் கம்ப்யூட்டரை விரித்து வைத்து, கமிஷனருடன் பேரம் பேசி… ரொம்பவெல்லாம் மெனக்கெடாமல் மிக சுலபமாக தெரியக்கூடிய பயங்கரவாதிகள் நிறையப்பேர் நாட்டுக்குள்ளேயே இருக்கிறார்கள். நரேந்திர மோடி, ராமகோபாலன், துக்ளக் சோ, இந்து ராம், பிரவீன் தொக்காடியா என்று அந்தப் பட்டியல் பெரிது. இவர்கள் அத்தனை பேரும் ஆயிரக்கணக்கான மக்கள் படுகொலைகளில் நேரடியாகவும், மறைமுகமாகவும் கை நனைத்தவர்கள்.
ஒரு திரைப்படத்தை வெறுமனே பொழுதுபோக்கு பிரதி என்று அலட்சியமாக அணுக முடியாது . ஏனென்றால் கமல் அவ்வாறு இதை கையாளவில்லை. மாறாக இந்தியாவையே உலுக்கிய பெஸ்ட் பேக்கரி வழக்கை போகிறபோக்கில் ஊறுகாய் மாதிரித் தொட்டுச் செல்கிறார். தன் மனைவியை இந்து தீவிரவாதிகள் கொன்றார்கள் என்பதை முஸ்லீம் ஒருவர் வர்ணிக்கும்போது பின்னாலிருக்கும் சந்தானபாரதி ‘அதான் மிச்சம் ரெண்டு இருக்குல்ல…’ என்று நக்கல் பேசுகிறார். இவை எவற்றையும் வெறுமனே பொழுதுபோக்காகவும், ‘இதுவும் இன்னொரு படமே’ என்பதாகவும் எடுத்துக்கொள்ள முடியாது.
மிக வலுவான பாசிஸ இந்துத்துவ அரசியலை வெளிப்படையாக தூக்கிப் பிடிப்பதன்றி இதன் அரசியல் வேறென்ன? ‘இந்த கொடுமையான படம் முடிந்ததே’ என்று வெளியேறினால் கமல்ஹாசன் மகள் ஸ்ருதியின் இசையில் டைட்டில் கார்டுக்கு பின்னால் ஒலிக்கிறது. ‘சம்பவாமி யுகே, யுகே..’ என்னும் பாடல். ‘யுகங்கள் தோறும் பிறப்பெடுப்போம்’ என்று அர்த்தமாம். ஒண்ணுக்கே… இதுல யுகங்கள் தோறுமா?
ஒன்று நிச்சயம் இத்திரைப்படத்துறையன்றி எத் துறையானாலும் அதில் முஸ்லிம்கள் முழுமையாக கால்ப்பதிக்காதவரை இதுபோன்ற பாப்பான்கள் தொடர்ந்து ஆடத்தான் செய்வார்கள்.
Source: ஆழியுரான், நன்றி : பாலைவனத் தூது
கோப்பு வகை: அரசியல் | குறிச்சொற்கள்: அரசியல், இந்தியா, கல்வி செய்தி, கஷ்மீர், செய்திகள், லிபிய அதிபர் கடாபி, news, Ulagam
கஷ்மீர் தனி நாடாக வேண்டும் என்று ஐ.நா. கூட்டத்தில் பேசி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்
லிபிய அதிபர் கடாபி.
![[gaddafi2.jpg]](http://1.bp.blogspot.com/_Vzaj3plME5c/Sru-TpD1I8I/AAAAAAAABrs/xItMA1wPWiM/s1600/gaddafi2.jpg)
நியூயார்க்: கஷ்மீர் தனி நாடாக வேண்டும் என்று ஐ.நா. கூட்டத்தில் பேசி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார் லிபிய அதிபர் கடாபி.
ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக நியூயார்க் வந்த கடாபி, பொதுச் சபையில் சுமார் ஒரு மணி நேரம் பேசினார் (அவருக்கு ஒதுக்கப்பட்ட நேரம் கால் மணி நேரம்தான்).
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை கடுமையாக சாடிப் பேசிய கடாபி, கஷ்மீர் பிரச்சினையையும் பெரிதாகப் பேசி இந்தியாவுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளார்.
அவர் பேசுகையில், ஐ.நா. சபையும், பாதுகாப்பு கவுன்சிலும் உருவாக்கப்பட்ட பின்னர் 65 போர்கள் நடந்துள்ளன. இதற்கு மேலும் இதுபோல நடக்கக் கூடாது.
பாதுகாப்பு கவுன்சில் என்று கூறுவதை விட தீவிரவாத கவுன்சில் என்று கூறினால் பொருத்தமாக இருக்கும்.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் உள்ளன நிரந்தர உறுப்பினர்களுக்கு வீட்டோ அதிகாரம் இருக்கக் கூடாது. ஆப்பிரிக்க யூனியன், லத்தீன் அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகியவற்றுக்கு சபையில் பிரதிநிதித்துவம் தரப்பட வேண்டும். மேலும், நிரந்தர உறுப்பு நாடுகளை சுழற்சி முறையில், அதாவது ஆறு மாதங்களுக்கு ஒருமுறை மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும்.
ஜான் கென்னடி, மார்ட்டின் லூதர் கிங் ஆகியோரின் படுகொலைகள் குறித்து சரியான விசாரணை நடத்தப்படவில்லை. அதை ஐ.நா. செய்ய வேண்டும். அதேபோல கொரியா, வியட்நாம், ஈராக், ஆப்கானிஸ்தான் போர்கள் குறித்தும் விசாரணை நடத்தப்பட வேண்டும்.
பின்லேடன் ஒரு தலிபான் என்று யார் சொன்னது. பின் லேடன் தலிபான் அல்ல, அவர் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவரும் அல்ல.
பன்றிக் காய்ச்சல் தானாக பரவவில்லை. மாறாக ராணுவ ஆய்வகத்திலிருந்து பரப்பி விடப்பட்டுள்ளது இது.
அமெரிக்க அதிபராக பாரக் ஒபாமா நிரந்தரமாக நீடித்தால் நான் சந்தோஷப்படுவேன்.
காஷ்மீர் தனி நாடாக வேண்டும்…
காஷ்மீர் இந்தியாவுக்கும் சொந்தமானதல்ல, பாகிஸ்தானுக்கும் சொந்தமானதல்ல. அது ஒரு தனி நாடாக, சுதந்திர நாடாக இருக்க வேண்டும். அது இந்தியா, பாகிஸ்தானுக்கு உரிமை இல்லாத தனி நாடாக வேண்டும். இதன்மூலம் இந்தப் பிரச்சனைக்கு நாம் முடிவு கட்டலாம்.
ஐ.நா. பாதுகாப்பு சபையில் மேலும் எந்த நாட்டையும் சேர்க்கக் கூடாது என்றார் கடாபி.
NEWS from Thatstamil
கோப்பு வகை: அரசியல் | குறிச்சொற்கள்: அமெரிக்கா, இங்கிலாந்து, இத்தாலி, இந்தியா, இஸ்லாமிய மாநாடு, எகிப்து, சஊதி அரேபியா, சத்தியமார்க்கம்.காம், சமயக் கருத்தரங்கு, சீனா, ஜப்பான், பிரான்சு, பிலிப்பைன்ஸ், Muslim World League
உலகளாவிய சமயக் கருத்தரங்கு
சஊதி அரேபியாவின் மன்னர் அப்துல்லாஹ் அவர்களின் முனைப்பான முயற்சியால், வருகிற செப்டம்பர் 30ஆம் தேதியன்று ஜெனிவா நகரில் இக்கருத்தரங்கு இன்ஷா அல்லாஹ் மாபெரும் மாநாடுபோல் நடக்க இருக்கின்றது. இரண்டு நாட்கள் நடக்கவிருக்கும் இக்கருத்தரங்கில் சஊதி அரேபியா, எகிப்து, இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா, ஜப்பான், பிரான்சு, இத்தாலி, பிலிப்பைன்ஸ் முதலிய நாடுகளின் பல்சமய அறிஞர்களும் விற்பன்னர்களும் கலந்துகொள்ள இருக்கின்றனர்.
“மானிட மதிப்புயர்வை உயர்த்திப் பிடிக்கும் மக்கா-மதீனாவின் காவலர் அப்துல்லாஹ்வின் முன்முயற்சி” என்பதுவே இவ்விரண்டு நாள் கருத்தரங்கின் கருப்பொருளாகும். இதற்காகவென்றே வலைத்தளம் ஒன்றை ‘ராபித்தா’ எனும் அனைத்துலக இஸ்லாமியக் கழகம் (Muslim World League) தொடங்கிவைத்துள்ளது. இக்கருத்தரங்கின் ஏற்பாட்டாளரே இந்த ‘ராபித்தா’தான். மேற்கண்ட தலைப்பையொட்டி, பல்சமயக் கருத்துப் பரிமாற்றம், மீடியாக்களின் பங்கு, மதங்களிடையே புரிந்துணர்வு, தவறான முன்மாதிரிகளை அடையாளப்படுத்துவது போன்ற துணைத் தலைப்புகளிலும் இக்கருத்தரங்கில் விவாதங்கள் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சஊதி மன்னர் அப்துல்லாஹ்வின் முயற்சியால் நடைபெறும் நான்காவது கருத்தரங்கமாகும் இது. இதன் முதல் கருத்தரங்கு, மக்காவிலும், இரண்டாவது ஸ்பெயின் நாட்டுத் தலைநகர் மாட்ரிடிலும், மூன்றாவது நியூ யார்க்கிலுள்ள ஐக்கிய நாடுகள் அவைத் தலைமையகத்திலும் நடந்துள்ளன.
மக்காவில் 2008 ஜூன் நான்காம் தேதியன்று நடந்த முதலாவது மாநாட்டில் உலக முழுவதிலிருந்தும் 500க்கு மேற்பட்ட இஸ்லாமிய அறிஞர்கள் கலந்து கொண்டனர். இக்கருத்தரங்கில்தான், முஸ்லிம்கள் இதர மதத்தினருடன் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பது பற்றிய வழிகாட்டலுக்கான திட்டம் வகுக்கப்பட்டது. அதற்கடுத்த மாதம் ஜூலை 16, 2008 அன்று ‘ராபித்தா’ அமைப்பு உலகின் 50 நாடுகளிலிருந்தும் சுமார் 300 பல்சமய அறிஞர்களையும் அறிவியல் மேதைகளையும் அரசியல் தலைவர்களையும் மாட்ரிடுக்கு வரவழைத்துக் கருத்துப் பரிமாற்றத்திற்கு வழி வகுத்தது.
“வரலாற்றுப் புகழ் மிக்க இந்த மாநாடு வெற்றிபெற வேண்டுமாயின், உலக மக்கள் அனைவரையும் இணைக்கும் பாலம் எது என்பதை நாம் கண்டறிய வேண்டும். நமது ஆழிய இறைநம்பிக்கை, சிறந்த கோட்பாடுகள், மதங்களின் அடிப்படையான உயர்ந்த நீதி ஆகியவையே நம் அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும்” என்ற அடிப்படையில் மன்னர் அப்துல்லாஹ்வின் இம்மாநாட்டுத் தலைமையுரை அமைந்தது.
அமெரிக்காவின் அமைதிக்கான கிருஸ்தவ-முஸ்லிம்கள் கூட்டமைப்பின் தலைவர் வில்லியம் பேக்கர்,
அமெரிக்க யூதக் கமிட்டியின் இயக்குநரான டேவிட் ரோசன்,
முஸ்லிம்-கிரிஸ்தவப் புரிந்துணர்வமைப்புத் தலைவரான ஜான் எஸ்போசிட்டோ,
சமாதானக் கழகத் தலைவரான தெர்ஜி ரீட் லார்சன்,
அமெரிக்க இஸ்லாமிய உறவுக் குழுவின் (CAIR) தலைவரான லேரி ஷா,
இந்தியத் துணை ஜனாதிபதி முஹம்மத் ஹாமித் அன்சாரி,
‘யுனெஸ்கோ’ தலைவர் கொய்ச்சீரோ மட்சூரா,
ஜெர்மனியின் கிரிஸ்தவ-முஸ்லிம் கூட்டமைப்புத் தலைபவர் தாமஸ் லெம்மன்,
டெல்லி குருத்துவாராவின் தலைவர் பிரேம்ஜித் சிங் சர்னா
ஆகிய உலகளாவிய பிரபல புள்ளிகளோடு சஊதி அரேபியாவின் 19 பல்துறை அறிஞர்களும் இம்மாநாட்டில் கலந்து கொள்ள இருக்கின்றனர் என்பது குறிப்பிடத் தக்கது.
- தகவல் : அதிரை. அஹ்மது, நன்றி : சத்தியமார்க்கம்.காம்
கோப்பு வகை: அரசியல் | குறிச்சொற்கள்: அமீரகம் தோப்புத்துறை, ஈகைத் திருநாள் கொண்டாட்டம், சமூகம், த மு மு க, துபாய் – தேய்ரா, தோப்புத்துறை, வெளிநாடு, ஷார்ஜா, Dubai, Gulf, Thopputhurai
துபாய் : ஈகைத் திருநாள் கொண்டாட்டம்
துபாய் – தேய்ரா நகரில் உள்ள ஈத்கா மைதானத்தில் சிறப்புத்தொழுகையில் தோப்புத்துறையை சேர்ந்தவர்கள் வழ்த்துக்களை பரிமாறிக்கொள்ளும் காட்சிகள்




Photos by : Avuliya on facebook
